districts

img

ஆட்டம் முடிந்த பிறகு விதிகளை சொல்லும் ஒன்றிய அரசு!

ஆட்டம் முடிந்த பிறகு விதிகளை சொல்லும் ஒன்றிய அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களை கண் டித்தும், நீட்தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியு றுத்தி கோவையில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி திரு மண மண்டபத்தில் நடைபெற்ற  நிகழ் வில், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை யின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்  கஜேந்திரபாபு, மக்கள் நல்வாழ்விற் கான மருத்துவர் அரங்கம் சார்பில்  எம்.நேரு பாபு ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பி னர்களை வெளியேற்றிவிட்டு புதிய  குற்றவியல் சட்டங்களை நிறைவேற்று வதும், நீட் தேர்வில் முறைகேடு அம்பல மான பிறகு புதிதாக விளக்கங்கள்  சொல்வதும், ஒன்றிய மோடி அரசின்  தொடர் நடவடிக்கையாக உள்ளது.  அநீதிக்கு எதிராக களம் காணும் கம்யூ னிஸ்ட்டுகளே இவ்விகாரத்திலும் களத் தில் நிற்கிறார்கள் என தலைவர்கள் உரையாற்றுகையில் தெரிவித்தனர்.

முன்னதாக, மூத்த வழக்கறிஞர் ப. பா.மோகன் பேசுகையில், ‘‘இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட விதம் ஒரு திட்ட மிட்ட செயலாகும். எதை இந்த மண் ணுக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தார்களோ, அதை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். இதை எதிர்க்க வேண்டியது யார்?. இத்தகைய சட்டங் கள் இயற்றப்படும் பொழுது, நாட்டி லேயே தமிழகத்தில் மட்டும் தான் வழக் கறிஞர்கள் வீதிக்கு வந்து போராடுகின் றனர். இப்போது கொண்டு வரப்பட் டுள்ள சட்டங்கள் சாதாரணமானதல்ல. இந்திய தண்டனைச் சட்டம் என்பது ஒரு  நெறிமுறைச் சட்டம். சிஆர்பிசி என்பது ஒரு புரொசிஜர் சட்டம் என்று சொல்லு வார்கள். அவசர நெருக்கடி காலத்தில் பிறப்பிக்கப்பட வேண்டிய சட்டங்கள் உண்டு. எமர்ஜென்சி காலத்தில் அடிப் படை உரிமைகள் தடை செய்யப்பட் டது. 2020 இல் 7 பேர் கொண்டு கமிட்டி அமைத்தனர். அதில் ஒருவர் மட்டுமே வழக்கறிஞர். மற்றவர்களுக்கு சட்டத் துக்கும், சட்டத்துறைக்கும் தொடர்பு இல்லை. 2023 இல் 146 எம்.பிக்களை இடைநீக்கம் செய்யப்பட்டு இந்த சட் டம் கொண்டு வரப்பட்டது. நம் அரசி யல் சாசனத்தின் வரலாறு என்பது அற்பு தமானது.  இந்த சமூகத்தை மாற்றக் கூடியவர்கள் கம்யூனிஸ்ட்கள். இன்று கோவையில் எடுத்த இந்த முயற்சி மிக அற்புதமானது, என்றார்.

தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், நீட் தேர் வில் முறைகேடு என்றவுடன் டிஎன் பிஎஸ்சி தேர்வுகளில் முறையீடு நடக்க வில்லையா என்று பதில் கேள்வி எழுப் புகின்றனர். நீட் தேர்வுக்கும் டிஎன்பி எஸ்சி தேர்வுக்கு வித்தியாசம் தெரியா மல் அரசியலுக்காக சிலர் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய சூழ்ச்சியாக கடந்த ஆண்டு களில் குளறுபடிகளுடன் தான் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ் வொரு ஆண்டிலும் ஒவ்வொரு வகை யான முறைகேடுகள் அரங்கேறி இருக் கின்றன. அதிலும் இந்த ஆண்டு நடை பெற்று இருப்பது முறைகேடுகளின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு இதைவிட மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறலாம் என்ற அச்சம் மேலோங்குகிறது. ஆட்டத்தை  தொடங்குவதற்கு முன்புதான் விதி களை சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு விதிகளை சொல்வது நியாயமான அணுகுமுறையா என்பதே நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி. நேர விரையத்துக்கு மதிப் பெண் கொடுப்பதாக இருந்தால் அதற்கு என்ன அளவீடு வைத்திருக்கிறீர்கள் என் பதை தேர்வு தொடங்குவதற்கு முன்பே தகவல் கொடுத்து இருக்க வேண்டும். நீட் தொடர்பான பழைய கேள்விகள் விடை இல்லாமல் இருக்கும்போது தற்போது நடைபெற்று இருக்கும் நீட் தேர்வின் குளறுபடிகள் புதிய கேள்வி களை உருவாக்கி இருக்கின்றன. நீட் என்ற நடைமுறை மாணவர்களின் நல னுக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராக இயற்றியிருக்கும் சட் டத்தை ஒன்றிய அரசு குடியரசு தலை வர் ஒப்புதலை பெற்று தருவதற்கான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது. எனினும் ஒன்றிய அரசுக்கு மாணவர் நலனில் துளியும் அக்கறை இல்லை. கல்வி பண் பாட்டின் கூறு என்பதால்தான் அது  மாநில பட்டியலில் வைக்கப்பட்டிருந் தது. அவசர நிலை காலகட்டத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வி எந்தவித விவாதங்களும் இன்றி ஒத்தி சைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதை பயன்படுத்தி மாநில அரசின் கல்வி சார்ந்த உரிமைகளை ஒன்றிய  அரசு எடுத்துக் கொள்வது அரசியல மைப்பின் நோக்கங்களுக்கு எதிரா னது.

பள்ளிப்படிப்பு மதிப்பெண்ணை வைத்து இனி உயர் கல்வியில் சேர  முடியாது என்ற சூழலில் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் தகுதி எனச் சொல்லிவிட்டார்கள். அப்ப டியிருக்க மக்கள் எதில் கவனம் செலுத் துவார்கள்? இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பெருமளவு குறை யும். தன்னம்பிக்கை, மனித உரிமை, பெண்ணுரிமை, சூழலியல் உரிமை, அர சமைப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து  மாணவர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு குறையும். பள்ளிக்கல்வி முடித் தும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி வகுப் புக்கு செல்ல வசதியும், வாய்ப்பும் இல் லாத மாணவர்கள், மேல்நிலை வகுப்பு பயிலும்போதே நீட் பயிற்சி வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை  மாணவர்கள் உள்ளிட்டோர், அதற்கான வாய்ப்புகளை பெற முடிந்த, வசதி படைத்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் போட்டியிட வேண் டிய சூழல் நீட் தேர்வால் நிலவுகிறது. 

இப்படி பொருளாதார ரீதியாகவும், மாணவர்களின் வசிப்பிட ரீதியாகவும், தேர்வுக்கு முன்னேற்பாடு செய்வதற் கான கால அளவிலும் சமமற்ற போட்டி நிலவுவதாகவும், அந்த சமமற்ற போட் டியே மாணவர்களின் மன அழுத்தத் துக்கு காரணமானவதாகவும் விமர்ச னங்கள் எழுந்துள்ளன. நீட் தேர்வு ஒரு வணிக சூதாட்டம். இந்த தேர்வை நடத் தும் தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி – என்டிஏ) ஒரு கல்வி நிறுவனம் அல்ல மாணவர்களை மதிப் பீடு செய்யும் நிபுணத்துவம் பெற்ற அமைப்பும் அல்ல. நெகட்டிவ் மதிப் பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், அவற்றிற்கான மருத்துவர்கள், செவி லியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 90 விழுக்காட்டை பிற மாநில மாணவர்கள் ஆக்கிரமித் துள்ளனர். எனவே, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு சரியானது என்று பேசி வரும் பாஜக மாநில தலைவர்களுக்கு இதனை இடதுசாரிகள் உணர்த்த வேண்டும், என்றார்.