districts

img

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி

நாமக்கல், டிச. 16- தொடர் மலையின் காரணமாக நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய  ஏரியாக தூசூர் ஏரி இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரி யில் உபரி நீர் வெளியேறுவதால் பொது மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். நாமக்கல் துறையூர் சாலை யில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில்  தூசூர் கிராமத்தின் அருகே மிகப் பழமை யான ஏரி அமைந்துள்ளது. சுமார்  600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு  கொண்ட அந்த ஏரி நாமக்கல் மாவட்டத் தின் மிகப்பெரிய ஏரியாகவும், எருமப் பட்டி பகுதியில் முக்கிய நீர் ஆதார மாகவும் இருக்கிறது.  இந்த ஏரியின் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவ சாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் கரும்பு, சோளம், கேழ் வரகு, நெல் உள்ளிட்ட பயிர்கள் பயி ரிடுவதற்கு இந்த ஏரி நீர் முக்கிய நீர்  ஆதாரமாக இருக்கிறது. கொல்லிமலை யில் மழை பெய்தால், மழைநீர் வெள்ள மாக பெருக்கெடுத்து, அந்த நீரானது  நஞ்சுண்டாபுரம் ஏரி, காந்திபுரம் ஏரி,  முத்துக்காப்பட்டி ஏரி, பழையபாளை யம் சின்ன ஏரி, பழைய பாளையம் பெரிய ஏரி உள்ளிட்ட 9 ஏரிகளில் நீர்  நிரம்பி, அதன் பின்னர் உபரி நீர் தூசூர்  ஏரியை வந்தடையும். இந்த நீரானது பல்வேறு பகுதிகள் வழியாக சென்று கடைசியில் திருச்சி மாவட்டம் காட்டுப் புதூர் அருகே காவிரியில் கலக்கும் வகையில் வெள்ள நீர் பாதை அமைக் கப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வாரங்களாக கொல்லிமலை சேர்ந்த சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்தது.  இதன் காரணமாக தூசூர் ஏரியில் நீர்வ ரத்தை அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடல் போல் ஏரி  காணப்படுகிறது. இதனால் நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் ஏரி  பகுதிக்கு வந்து ரசித்துச் செல்கின்ற னர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக் கான விவசாய நிலங்கள் இந்த நீரின்  மூலமாக பாசன வசதி பெறும் என்பதால்  விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.