districts

img

மின் கம்பி பழுதால் நடு வழியில் நின்ற ரயில்

நாமக்கல், அக்.21- மின் கம்பியில் ஏற்பட்ட பழுதால் பள்ளிபாளையம் பகுதி யில் ரயில்கள் நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து திருச் செங்கோடு செல்லும் சாலையில் ஆனங்கூர் ரயில் நிலையம்   உள்ளது. இந்த ரயில் நிறுத்தத்தில் உள்ள மின் கம்பிகள் பழுதின் காரணமாக வியாழனன்று மின்சார ரயில்கள் செல்ல  முடியாமல் நின்றது.  இதில், எர்ணாகுளத்தில் இருந்து செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டது.  மேலும், ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து திருச்செங் கோடு, சேலம், குமாரபாளையம் செல்லும் பேருந்துகள், இரு  சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத  சூழல் ஏற்பட்டது. இதனால், வேலைக்கு செல்லும் பொது  மக்களும், பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,  மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, மாலை மின் கம்பி சீரமைக்கப்பட்டதால்  ரயில்கள் புறப்பட்டு சென்றன. நீண்ட தொலை தூரங்களுக்கு  வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இப்பகுதியில் பல் வேறு காரணிகளால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், ரயில்வே மேம்பாலம் அமைக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.