districts

img

புத்தக வாசிப்பு எனும் மரபு தொடர வேண்டும்

சேலம், டிச.3- புத்தக வாசிப்பு எனும் மரபு  தொடர வேண்டும் என சேலம்  புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் தார். சேலம் புதிய பேருந்து நிலையம்  அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத்  திருவிழாவில் சனியன்று, ஆத்தூர்  சுந்தரம் எழுதிய “ஏதுகருதி வைத் தேன்” எனும் நூல் வெளியிட்டப் பட்டது. இந்நூல் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மதிப்புரை யாற்றி பேசுகையில், இப்புத்தகத்  திருவிழாவில் முன் எப்போதுமில் லாத வகையில் வாசிப்பாளர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்துதரப்பினரும் பயன்பெ றும் வகையில், உலகில் தலை சிறந்த ஓவிய அரங்குகள், புகைப்பட  கண்காட்சி, உலக விருதுகள் பெற்ற புத்தகங்கள், திரையரங்குகள், கோள் அரங்கம் என பல்வேறு அரங் குகள் அமைக்கபட்டுள்ளன. இது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந் துள்ளனார். இதுவரை ரூ.1.21 கோடி  மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அறிவை தேடி வருகிற புத்தக வாசிப்பாளர்கள் அளவு கடந்துள்ளனர். புத்தக வாசிப்பு எனும் மரபு தொடர வேண் ்டும். இப்புத்தகத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகை யில் எழுதுபவர்களையும், வாசிப்ப வர்களையும் ஊக்குவிக்கவும், ஒவ் வொறு நாளும் உள்ளூர் எழுத்தா ளர்களின் படைப்புகளை அரங் கேற்ற வேண்டும் என்ற அடிப்படை யில் அனைத்து நாட்களிலும் ஒரு  உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்  வெளியிடப்பட்டு வருவது மகிழ்ச்சிக் குரிய ஒன்றாகும், என்றார். இதைத் தொடர்ந்து இதழியல் மற்றும் மக் கள் தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் தமிழ்ப்பரிதிமாரி, “இணைய வழித்தமிழ்மேம்பாடு” எனும் தலைபில் கருத்துரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாந கராட்சி மாநகர நல அலுவலர் யோகநந், கல்லூரிக் கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் நா.இரா மலட்சுமி, ஆத்தூர் சுந்தரம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.