நாமக்கல் ஜூன் 24- 80 வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த ஊர் பொது கிணற்றை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் ஒன்றியம் தொண்டிப்பட்டி கிராமம் அருந்ததி யர் தெருவில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இப்பகுதி மக்களுக்கு கடந்த 80 வருடங்களுக்கு முன்பு ஊர் பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கிணற்றை அகற்ற அங்குள்ள ஒருவர் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத னையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காலம் காலமாக பயன்படுத்தி வந்த பொது கிணற்றை பாது காக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.