அவிநாசி, அக்.19 – மங்கலம் சாலையில் நீண்ட காலமாக நிலுவை யில் இருந்த சாலை பணி கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் நிறைவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், மங்க லம் சாலை பிரிவில் இருந்து, அம்மாபாளையம் வரை குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் வேலை நடைபெற்று முடிந்துள்ளது. இச்சாலையானது அவினாசி அருகே மங்கலம் சாலை பிரிவில் இருந்து முக்கால் கிலோமீட்டரும், பூண்டி நகராட்சி இணைப்பு சாலையாகவும் உள்ளது. இந்நிலையில் தார்சாலையில் பள்ளம் தோண்டிய தால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. இதை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம், நவம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வந்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உமையஞ்செட்டிபாளையம் கிளை மற்றும் பொதுமக்கள் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம், தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். அத்துடன் கற்களையும், மண்ணையும் போட்டு பணி களைத் துவங்கியுள்ளனர். எனினும் 10 மாதங்கள் கடந்த நிலை யிலும் பணிகள் முடியவில்லை. அவிநாசி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விரைவில் பணிகளை முடிக்க கோரிக்கை மனு அளித்தனர். இதனிடையே இப்பிரச்சனை குறித்து நடவ டிக்கை எடுக்காத அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் உமையஞ்செட்டி பாளையம் கிளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.