மின்வாரியத்தை இரண்டாக பிரிக்கும் அரசாணைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கோவை டாடாபாத் மத்திய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி மீனாட்சி சுந்தரம், கிளைச் செயலாளர் ஆர். விவேகானந்தன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநகர கிளைச் செயலாளர் டி.மணிகண்டன், மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.