அவிநாசி, மார்ச்.7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 27 ஆம் தேதி முதல், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோரி அவிநாசி வட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்ட கிளைச் செயலாளர் கருப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகே சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.