நாமக்கல், ஆக.17- அரசு மேல்நிலைப் பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயிலும் பள்ளியில் கழிப்பிடம் மற்றும் சுற்றுசுவர் செய்து தரக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத் தில் அமைந்துள்ள, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் அவதி அடைந்து வரு கின்றனர். இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் உள்ளது. மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இல்லாத நிலை இருப்பதால், அருகிலுள்ள ஊர் பொதுமக்கள் இப்பள்ளி வளாகத்தில் ,ஆடு மற்றும் மாடுகளை மேய விடு கின்றனர். பள்ளி பாதுகாப்பற்ற முறையில், இருப்பதால் சமூக விரோத செயல்பாடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நல்லிபாளையம் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வின் போது இந்திய மாணவர் சங்கத் தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் தங்கராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.