அவிநாசி, அக்.22 – அவிநாசி அருகே புதுப்பாளை யம் ஊராட்சி பகுதிகளில் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் அவி நாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவினாசி ஒன்றியம் புதுப்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட, சாமந்தங் கோட்டை பிள்ளையார் கோவில் முதல் சென்னிமலை கவுண்டர்நகர் வரையிலுள்ள சாலையை சீரமைக்க வும், மேற்கு வஞ்சிபாளையம் ஆதி திராவிடர் காலனி வடிகாலில் நிரம்பி யுள்ள மண்ணை அகற்றவும், ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் சாலை வசதி செய்து தரவும், பொன்ராமபுரத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத சமுதாய நலக்கூடத்திற்கு காவ லாளி நியமித்ததாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் மாதம்தோறும் ரூ.9,300 எடுத்து வந்ததை விசாரணை செய்ய வும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வஞ்சிபாளையம் தெற்கு கிளை சார்பில் அவிநாசி ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி பொது மக்கள் செவ்வாயன்று தலையணை விரிப்பு, பாத்திரங்களுடன் கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் குடியேற முற்பட்டனர். ஆனால் காவல் துறையினர் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவுப்பகுதியில் தடுப்பரண்களை வைத்து உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தனர். எனி னும் போராட்டத்திற்கு வந்தவர்கள் தடுப்பரண்களைக் கடந்து உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே மார்க் சிஸ்ட் கட்சியினர் தரையில் அமர்ந்து ஆவேசமாக கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி யினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதையடுத்து பொது மக்களுடன், கட்சி நிர்வாகிகள் அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்த பேச்சுவார்த்தையில், 25 நாட்களுக்குள் சாமந்தங்கோட்டை சாலை பணிகள் முடித்துக் கொடுக் கப்படும், மேற்கு வஞ்சிபாளையம் ஆதிதிராவிடர் காலனி சாக்கடையில் மண்ணை அகற்ற இரண்டு நாட்க ளில் தீர்வு காணப்படும், ஸ்ரீவாரி கார்டன், சென்னிமலை கவுண்டர் நகர் பகுதியில் உடனடியாக தெரு விளக்கு அமைத்துக் கொடுக்கப்ப டும், ஸ்ரீவாரி கார்டன் பகுதிக்கு சாலை வசதி செய்ய முன்மொழிவு அனுப்பப் படும், பொன் ராமபுரம் சமுதாய நலக் கூடத்தில் காவலாளி நியமித்த தாக மாதந்தோறும் ரூ.9,300 எடுத்த விவகாரத்தில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 640 நிதியை ஊராட்சி நிதிக்கு திரும்பச் செலுத்த உத்தர விடப்பட்டுள்ளது என்ற விபரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரி யப்படுத்தியுள்ளது உள்ளிட்டவை களை எழுத்துப்பூர்வமாக கடிதமா கத் தந்தனர். இதை ஏற்றுக்கொண்டு போராட்டம் நிறைவடைந்தது. இப்போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் தெற்கு கிளைச் செயலாளர் ஹனிபா தலைமை ஏற்றார். கட்சியின் ஒன்றி யச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். பழனிசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள், வார்டு உறுப்பினர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.