பென்னாகரம், ஜூன் 7- 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியு றுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத் தினர், மாங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அருகே உள்ள மாங்கரை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிக ளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணி நேரம் முறையாக பணி வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளை அவதூறாக பேசும் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் கணக்கில் முறையாக ஊதி யத்தினை செலுத்த வேண்டும். மாதத் தில் 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான நலச்சங்கத்தினர் மாங் கரை ஊராட்சி மன்ற அலுவலகத் திற்கு பூட்டு போட முயன்றனர். இதையடுத்து மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன், ஊராட்சி செய லர் மாதையன் ஆகியோர் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது, மாங்கரை ஊராட்சி யில் 100 நாள் வேலைத்திட்டம் மேற் கொள்ளும் போது அந்தந்த பகுதி களில் உள்ள மாற்றுத்திறனாளிக ளுக்கு பணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பணியின் போது மருத் துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. முன்ன தாக, இப்போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சங்க வட்ட பொருளா ளர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான், வட்ட துணைத்தலைவர் பி.கே.மாரி யப்பன், நிர்வாகிகள் பவுனேசன், சக்திவேல், முனியம்மாள், சரவ ணன், இளங்கோவன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.