பள்ளிபாளையம், மே 14- தனியார் பள்ளியில் நவீன ரோபோடிக்ஸ் ஆய்வ கத்தை சனியன்று இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், என்டிஆர்எப் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எஸ் பி கே ஜெம்ஸ் என்ற தனியார் பள்ளியில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வுக் கூடத்தை இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், என்டிஆர்எப் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஏ ஆர்/ வி ஆர் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் லேப், ஸ்டெம் லேப் மற்றும் அடல் டிங்கரிங் லேப், 3டி தொழில்நுட்பம் கொண்ட ஆய்வகம் போன்ற நவீன அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கூடத்தில் மாணவ, மாணவி களுக்கு பயிற்சிகள் வழங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவனும், அறிவியல் ஆர்வமும், ஊக்க மும் பெறுவதற்கு இந்த ஆய்வகம் துணை செய்கிறது. நவீன ரோபோடிக்ஸ் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வக பயிற்சி பெற்றவர் களால் பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு காலை, மாலை ஆய்வகத்தில் பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட் டுள்ளது. அறிவியல் ஆய்வில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இம்மாணவர்களுக்கு வருடத் திற்கு ரூ. 50 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி பாடங்களுடன் அறிவியல் தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் அதற்கான பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மயில்சாமி அண்ணா துரை கூறினார். இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை மயில் சாமி அண்ணாதுரை பார்வையிட்டு, அவர் களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் செங்கோடன், பள்ளியின் தலைவர் பிரபு ஆகி யோர் பங்கேற்றனர்.