ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்ற மேட்டுப்பாளையம் சார் பதிவாளர்
மேட்டுப்பாளையம், ஆக.9- மேட்டுப்பாளையத்தில் உள்ள சார் பதிவாளர் அலு வலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி னர். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.25 லட்சத்து 33 ஆயிரம் சார் பதிவாளர் லஞ்சம் பெற்றது அம்பலமாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, கார மடை மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களின் நிலங்கள் இங்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அங்கு சார் பதிவாளர்களாக சாந்தி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் பெறப்படுவதாகவும், புரோக்கர்கள் நடமாட் டம் உள்ளதாகவும் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசா ருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து தகவலின் அடிப்படையில் வியாழ னன்று மாலை 6 மணியளவில் ஏடிஎஸ்பி திவ்யா உத்திர வின் பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையில் ஆறுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக நுழைந்து ஆய்வில் ஈடு பட்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த சார் பதிவாளர் சாந்தியிடம் விசாரணை நடந்தப்பட்டது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் லஞ்ச பணம் எங்கேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, சார் பதிவாளர் சாந்தி காரிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் லஞ்சம் பெற்றதற் கான சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை ஆய்விற்கு உட்படுத்தினர். வியாழனன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை ரொக்கமாக பணம் ஏதும் சிக்காத நிலை யில் லஞ்ச பணம் ரூ.25,34880 டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் சார் பதிவாளர் சாந்தி மற்றும் இவரது உறவினர்க ளுக்கு ஜி.பே மற்றும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந் தது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து சார்பதிவாளர் சாந்தி மற்றும் லஞ்ச பணம் பெற உதவிய அலுவலக ஊழியர் பிரவீன் குமார், சார்பதிவா ளரின் கார் ஓட்டுநர் ராஜா ஆகியோரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடைத்தரகர் நவீன்குமார் என்பவரை தேடி வருகின்றனர். மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
நாமக்கல், ஆக.9- குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், கே.பி.என் காலனியைச் சேர்ந்த வர் முரளிதரன். இவர் புதுச்சேரியிலுள்ள தனது நிறுவனம் சார்ந்த பணியினை பார்த்து வருவதற்காக, மகனுடன் சென்று விட்டு மீண்டும் வியாழனன்று அன்று இரவு திருப்பூ ருக்கு வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால், சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, முன் பக்க பேனட்டை திறந்து பார்த்தபொழுது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத னால் அதிர்ச்சியடைந்த முரளிதரன் உடனடியாக குமாரபா ளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கொட்டும் மழையிலும் காரானது தீயில் கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படகுப் போக்குவரத்து தொடக்கம்
ஈரோடு, ஆக.9- நெரிஞ்சிப்பேட்டையிலிருந்து பூலாம்பட்டி இடையே செல் லும் பயணிகள் படகுப் போக்குவரத்து 10 நட்களுக்குப் பிறகு வியாழனன்று தொடக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும் சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையிலான பயணிகள் படகுப் போக்குவரத்து 10 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்ட தால் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் இப்பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது காவிரியில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் வியாழனன்று பயணிகள் படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட் டது. கடந்த 10 நாள்களாக நெரிஞ்சிப்பேட்டை மற்றும் கோனேரிபட்டி கதவணை நீர்மின் நிலைய பாலங்கள் வழி யாக பொதுமக்கள் சென்று வந்த நிலையில், தற்போது மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பவர்டேபிள் கூலி உயர்வு தர மறுப்பு ஆக.13 மகாசபையில் முக்கிய முடிவு
திருப்பூர், ஆக. 9 - தென்னிந்தியா பனியன் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், பவர்டேபிள் உரிமையாளர் கள் சங்கத்திற்கும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி நான்கு ஆண்டு காலத்திற்கு கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி முதல் நடைமுறை கூலியில் இருந்து 7 சதவீ தம் கொடுக்க வேண்டும். அதற்கு முந்தைய மாதம் தையல்நூல் விலை உயர்வு, மின்கட் டண உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு, தையல் நிலைய உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும். இரண்டு மாதம் ஆகியும் சுமார் 20 பெரிய பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஒப் பந்தப்படி கூலி உயர்வு கொடுக்க மறுகிறார் கள் இவர்களிடம் சுமார் 1500 நிறுவனங்கள் பனியன், ஜட்டி, டிராயர் தயார் செய்து கொடுக் கிறார்கள் அதனால் பவர் டேபிள் நிறுவனங் கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இதற்கு ஒரு முடிவு எடுக்க வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில் பவர்டேபிள் உரிமையாளர் சங்க மகாசபை நடைபெறுகி றது. இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று சங்க செய லாளர் கே.எஸ்.முருகேசன் தெரிவித்துள் ளார்.
22 ஆவது நிட் ஷோ கண்காட்சி
22 ஆவது நிட் ஷோ கண்காட்சி திருப்பூர், ஆக. 9 - திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில்நுட் பங்களைக் காட்சிப்படுத்தும் 22ஆவது நிட் ஷோ கண்காட்சி வெள்ளியன்று தொடங்கியது. திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள டாப் லைட் மைதா னத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரம் கண்காட்சியில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசடையாது என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஜப்பா னில் தயாரிக்கப்பட்ட பிரின்டிங் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 350 பனியன்களுக்கு பிரிண்ட் அடிக்கும் வண்ணம் தயாரிக் கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயந்திரங்களும் பார்வையா ளர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிகழ்வில் திருப்பூர் டெல்லி, மும்பை பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த பின்னலாடை தொழில் துறையினர் கலந்து கொண்ட னர்.
ஆபாச படத்தைக் காட்டி மிரட்டியவருக்கு போக்சோ சட்டத்தில் இரண்டாண்டு சிறை
ஆபாச படத்தைக் காட்டி மிரட்டியவருக்கு போக்சோ சட்டத்தில் இரண்டாண்டு சிறை திருப்பூர், ஆக.9- ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் வீரமுருகன் (34). இவர் திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் தங்கியி ருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந் தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 வயது பள்ளி சிறுமியு டன் வீர முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, சிறுமி யின் ஆபாச படத்தை சிறுமியின் தந்தைக்கு வீரமுருகன் தனது செல்போன் மூலம் அனுப்பியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து வீரமுரு கனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வியாழ னன்று தீர்ப்பு கூறப்பட்டது. வீரமுருகனுக்கு 2 ஆண்டு கடுங் காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் இன்று துவங்குகிறது
உடுமலை, ஆக.9- அரசுப்பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 10 ஆம் தேதி சனிக்கிழமை முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒன்றிய துவக்க பள்ளிகள், உயர்நிலைப்பள்ளி கள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கற் றல் திறன் மற்றும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வலுப்படுத்தும் வகையில், ஆலோசனைகளை துறைகளுக்கு தெரி விக்கும் வகையில், கல்வி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நான்கு கட்டமாக நடைபெறு கிறது. அதன்படி 10 ஆம் தேதி 50 சதவீத துவக்கப்பள்ளிகளில், 17 ஆம் தேதி மீதம் உள்ள 50 சதவீத துவக்கப்பள்ளிகளி லும், 24 ஆம் தேதி உயர்நிலை மற்றும் மேல் நிலைபள்ளிகளிலும் மற்றும் 31 ஆம் தேதி நடுநிலை அரசுப்பள்ளிகளி லும் கல்வி மேலாண்மைக்குழு மறுகட்ட மைப்பு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்க னவே கடந்த 2 ஆம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உத விக்குழு தலைவர், இல்லம் தேடிகல்வி அல்லது கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரி யர்கள், ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்ப டும். தேர்வு செய்யப்பட்ட குழுவில் கட்டாயம் 50 சதவீதம் பெண்கள் உறுப்பி னராக இருக்க வேண்டும். மேலும் குழு தலைவராக பெண்களை தேர்வு செய்ய முன்னுரிமை வழக்கப்படுகிறது. பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், தேவையான ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் கழிப்பிட வசதிகள் குறித்தும், மேலும், மாணவர்களின் கற் றல் திறன் மற்றும் மேம்பாடுகள் குறித்து அனைத்தையும் ஆய்வு செய்து கூட்டத் தில் தீர்மானங்கள் நிறைவேற்றி உரிய அலுவலர்களுக்கு அனுப்பும் உரி மையை தேர்வு செய்யப்பட்ட மேலாண் மைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2009 ஒன்றிய அர சால் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமை சட்டத்தின் படியும், தமிழக அரசு நிறை வேற்றி உள்ள அரசு ஆணைகள் படி யும் பள்ளி மேலாண்மை குழு அமைக் கப்படுகிறது உள்ளது. அரசுப்பள்ளி களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பள்ளி மேலாண்மைக்குழு குறித்து தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகிறது.
கோவையில் இன்று சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு
கோவை, ஆக.9- தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு இன்று (சனிக் கிழமை) கோவையில் நடைபெறுகிறது. கோவை வரதராஜபுரம், சாய் விவாகா மஹாலில் நடை பெறும் மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, அரசுத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, தலைவர் நெ.இல.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இம்மாநில மாநாட்டில் தமிழ்நாடு முழு வதும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இம்மா நாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள் ளது.
பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
தருமபுரி, ஆக.9- பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என ஜடை யம்பட்டி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்ட ஜடை யம்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேருந்து வசதி இல்லாததால் இங் குள்ள மக்கள் தினமும் 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கோபி நாதம்பட்டிக்கு சென்று, அங்கிருந்து தருமபுரி, மொரப்பூர் அரூர் ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஜடையம் பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. மேற்கொண்டு படிக்க கோபிநாதம்பட்டிக்கு செல்ல வேண்டும். கல்லூரி மாணாக்கர்கள் கோபிநாதம்பட்டிக்கு சென்று, அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் மாணவர்க ளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, காலை, மாலை நேரங்களில் கோபிநாதம்பட்டி வழியாக ஜடையம்பட்டிக்கு அரசு பேருந்து இயங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
நாமக்கல், ஆக.9- பள்ளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் முதலாமாண்டு மாணவர்க ளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங் கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில், மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப் பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, 147 மாணவர்க ளுக்கும், கிருஷ்ணவேணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 256 முதலாமாண்டு மாணவிகளுக்கும், தமிழக அர சின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதன்பின் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில், ஆவரங்காடு எம்சிசி அருகே ரூ.43 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு கூடம் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில், பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை, திமுக நகரச் செயலாளர் அ.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்
சேலம், ஆக.9- சேலம் அரசு மருத்துவமனையிலி ருந்து பச்சிளம் ஆண் குழந்தை கடத் தப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி வெண்ணிலா ஆக.5 ஆம் தேதியன்று பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். அவ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதாக தெரிவித்து, பரி சோதனைக்காக எடுத்துச் செல்ல வேண் டும் என அடையாளம் தெரியாத ஒரு பெண், குழந்தையை எடுத்துச் சென்றுள் ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தையை திரும்பி கொண்டு வராத தால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, குழந்தையை அந்த பெண் கடத்திச்சென்றது தெரியவந்தது. இது குறித்து மாநகர காவல் உதவி ஆணை யர் ஹரி சங்கரி தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தில் போதிய பாது காப்பு இல்லாததால் தொடர்ந்து குழந் தைகள் திருடப்பட்டு வருகிறது. குழந் தைகளை பராமரிக்க அனைத்து நிலை ஊழியர்களும் லஞ்சம் பெறுவதாக வெண்ணிலாவின் உறவினர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அடையாள வேலை நிறுத்தம் விசைத்தறியாளர்கள் சங்கம் முடிவு
ஈரோடு, ஆக.9- இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் பாலியெஸ்டர் நூல் பயன்பாட்டைத் தவிர்த்து காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு உண் ணாவிரதம் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்தி ரம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, தோக்கவாடி, ராஜா கவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சட்டையம்புதூர், கொல்லப்பட்டி, நெசவாளர் காலனி. வெப்படை, பள்ளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி உரிமையா ளர் சங்கங்கள் திங்களன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது. தொடர்ந்து அன்றைய தினம் உண்ணாவிரத கூட்டம் நடத்துவது என்றும் தமிழ்நாடு விசைத்தறி சங் கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் சேலை பாவுக்கு பாலியெஸ்டர் நூல் தரு வதாக டென்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலி யெஸ்டர் நூல் கொண்டு நடைமுறையில் இருக்கும் சைசிங் பாவு மூலம் ஓட்ட இயலாது. கைப்பாவில் குறைந்த அளவே ஓட்ட முடியும். எனவே, அனைத்து விசைத்தறிகளுக்கும் முழு மையாக பாவு நூல் வழங்க இயலாது. மேலும் பாவு பிணைப் பதில் மிகவும் சிரமம் ஏற்படும். ஆகவே உரிய நேரத்தில் உற்பத்தியை முழுமையாக முடிக்க முடியாத சூழல் ஏற்ப டும். அவ்வாறு ஏற்பட்டால் வெளி மாநிலத்தில் வாங்கும் அவ லமும் ஏற்படும். இதனால் விசைத்தறியாளர்களாகிய எங்க ளுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, இத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள விசைத்தறி யாளர்கள் முழுமையாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஆகவே, தமிழ்நாடு முதல்வர் எங்களது கோரிக் கையை பரிசிலித்து மாற்று நூல் அதாவது பாயெலிஸ்டர் காட்டன் மிக்ஸ் செய்யப்பட்ட நூல்கள் மூலம் சேலை உற் பத்திக்கு, பாவு நூல் வழங்க வேண்டும். அப்போதுதான் பொங்கல் பண்டிகைக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும், என்றனர்.