விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு ‘கி.ரா.’ விருது
கோவை, ஆக. 12- கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக் கான ‘கி.ரா.’ விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயு தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை விஜயா பதிப்ப கத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கெüரவிக்கப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரூபாய் ரொக்கம், கேடயத்தை உள்ளடக்கிய இந்த விருதுக்கான தொகையை, சக்தி மசாலா நிறுவனம் வழங்குகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான ‘கி.ரா.’ விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெறும் விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று, நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்குகிறார்.
ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை உடல்
ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை உடல் தருமபுரி, ஆக.12- காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் அடித்து வரப் பட்ட யானை தருமபுரி ஆலம்பாடியில் ஆற்றின் பாறையில் சிக்கியது. கர்நாடக வனப் பகுதியில் உயிரிழந்த யானை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்காமல் விடப்பட்டுள்ளது. ஒகே னக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்டு தமிழக எல்லையான ஆலம்பாடியில் ஆற்றின் இடையில் உள்ள பாறையின் மீது நின்றுள்ளது. கேரளம், கர்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிக ளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. உபரிநீா் அதிகரிப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது மரக்கட்டை கள், கால்நடைகள் உள்ளிட்டவை ஆற்றில் அடித்து வரப்பட்டன. இதன்ஒருபகுதியாக, கர்நாடக வனப் பகுதியில் உயிரி ழந்த யானையை பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதி யில் புதைக்காமல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் வனத் துறையினா் விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கா்நாடக அணைகளில் இருந்து மீண்டும் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள் ளது. நீா்வரத்து அதிகரிப்பினால் உயிரிழந்த யானை அடித்து வரப்பட்டு தமிழகப் பகுதியான ஆலம்பாடியில் ஆற்றின் நடுவே உள்ள பாறையின் மீது மோதி பாறை இடுக்கில் சிக்கி யது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட யானையை கா்நாடக மாநில வனத் துறையினா் வனப்பகுதியில் புதைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ள நிலையில், உடல் கிழிந்த நிலையில் இருப்பதால் தண்ணீா் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடத்தி வரப்பட்ட ரூ.2.97 கோடி பறிமுதல்
கோவை, ஆக.12- பாலக்காடு அருகே காரில் ரகசிய பெட்டி அமைத்து, கடத்தி வரப்பட்ட ரூ.2.97 கோடியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் பகுதியி லிருந்து காரில் இரண்டு பேர் ஹவாலா பணம் கடத்தி வருவ தாக சித்தூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் சித்தூர் அரசு மருத்து வமனை சந்திப்பு அருகே ஞாயிறன்று தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மலப்புரத்தில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், நிறுத்தாமல் சென்ற காரை காவல் துறையினர் விரட்டிச் சென்று மடக்கினர். அப்பொ ழுது காரிலிருந்த இரண்டு பேர் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து, காரில் சோதனை நடத்தினர். அதில் முன்புறம் இருக்கையின் அடி யில் ரகசிய பெட்டி அமைத்து, அதற்குள் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட் டது. விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்டம், அங்காடி புரம் பகுதியைச் சேர்ந்த ஜம்ஷாத், அப்துல்லா ஆகியோர் என்பதும். அவர்கள் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கள் ஹவாலா பணம் கடத்தும் கும்பலின் முக்கிய நபர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் கடத்தி வரப்பட்ட ரூ.2.97 கோடி மற்றும் காரை பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் பணத்தை யாருக்காக கடத்திச் சென்றார்கள்? எங்கே கொண்டு செல்வதற்காக கடத்தப்பட் டது? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதிவேடுகள் தமிழிலேயே பதிவு செய்யப்படும்
உதகை, ஆக. 12– ஆட்சி மொழி திட்ட விதிமுறைக ளின் படி பதிவேடுகள் அனைத்தும் தமிழிலேயே பதிவு செய்யப்படும். என அமைச்சர் சாமிநாதன் தெரிவித் தார். நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசு கையில், நம் தமிழ், வெறும் காட்சி மொழியாக மட்டுமல்லாமல் ஓர் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் கருணா நிதி கண்ட கனவு. அந்த கனவை நன வாக்கும் முயற்சியில் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தினை செயல்ப டுத்திடுத்தி வருகிறோம். அரசு அலு வலர்கள், பணியாளர்கள் அனைவ ரும் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும். பெயர்களின் முன்னால் இடம் பெறும் தலைப்பெழுத்துகள் தமிழிலேயே எழுதப்படும் முறையை யும் பின் பற்ற வேண்டும். ஆட்சி மொழி திட்ட விதி முறைகளின் படி பதிவேடுகள் அனைத்தும் தமிழி லேயே பேணப்படுவதையும் தமிழில் தான் அச்சிட்டு வழங்க வேண்டும். அரசு துறை தலைமை அலுவல கங்கள், மாவட்ட நிலை அலுவல கங்கள் ஆகிய வற்றின் பெயர் பலகைகள் தமிழிலும் ஆங்கிலத்தி லும் வைக்கப்பட வேண்டும் என்றார். தொடர்ந்த, உதகை பெத்தல கெம் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன், மாணவிக ளுக்கு இலவச சைக்கிள் வழங்கி னார். அங்கு, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மாணவிகளுடன் அமைச்சர் உறுதி மொழி எடுத்து கொண்டார். உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் நடந்த போதை பொருட்கள் தடுப்பு குறித் தான விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ரூ.25.30 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை
ஈரோடு, ஆக.12- ஈரோடு உழவர் சந்தையில் ரூ.25.30 லட்சத்திற்கு காய்க றிகள் விற்பனை நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், விடுமுறை தினமான ஞாயிறன்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.காய்கறிகளை வாங்கவும் அதிகாலை முதலே மக்களும் அதிகளவில் வந்திருந்தனர்.ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்தான 74.64 டன் காய்கறிகள் ரூ.25.30 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இதில், சம்பத் நகர் உழவர் ¬சந்தைக்கு வரத்தான 31.65 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 640க்கும், மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளுக்கும் வரத்தான 74.64 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.25 லட்சத்து 30 ஆயிரத்து 60க்கும் விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சேலம் மத்திய சிறை கைதி உயிரிழப்பு
சேலம், ஆக.12- அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேலம் மத்திய சிறை கைதி உயிரிழந்த நிலையில், உரிய சிகிக்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட் டியுள்ளனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் தீனா என்ற தீனதயாளன். 19க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சூரமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தீனாவிற்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டதாக சிறை நிர்வாகத்தி னர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், ஞாயி றன்று சிகிச்சைப்பலனின்றி தீனா உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக தீனாவின் உறவினர்கள், உரிய சிகிச்சை அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது
கோவை, ஆக. 12 விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், பீளமேடு கொடிசியா அருகில் வெள்ளியன்று நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்பபடை வீரர் பிரபு, மற்றும் பீளமேடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் மீது அந்த வழி யாக வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே ஊர்காவல் படையை சேர்ந்த பிரபு(34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயங்க ளுடன் சிறப்பு காவல் உதவியாளர் ரவி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விபத்துகுறித்து போக்குவரத்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்றதாக கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அஜய்ராகுல் என்பவரை கைது செய்து, விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி காட்டன் நூல் வழங்குவதாக அரசு உறுதியளித்தது
ஈரோடு, ஆக. 12- இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய பாலியஸ்டர் பாவு நூலுக்கு பதிலாக மீண்டும் காட்டன் நூல் வழங் கப்படும் என்று அரசு உறுதியளித்ததை அடுத்து விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டி கையையொட்டி ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை விநியோகிக் கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 1 கோடியே 68 லட்சம் வேட்டிகளும், 1 கோடியே 73 லட்சம் சேலைகளும் உற் பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இவை கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய் யப்பட உள்ளது. ஆனால், பெரும்பகுதி விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய் யப்பட உள்ளது. இந்நிலையில், சேலை உற்பத்திக்கு வழக்கமாக வழங்கப்படும் பருத்தி பாவு நூலுக்கு பதிலாக பாலியஸ்டர் நூல் வழங்க அரசு டென்டர் விட்டது. அவ் வாறு, பாலியஸ்டர் நூல் வழங்கினால் நடைமுறையில் உள்ள சைசிங் மூலம் பாவு ஓட்ட முடியாத நிலை ஏற்படும். எனவே, கடந்த காலத்தைப் போல பருத்தி நூல் வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை வலியு றுத்தி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்க ளின் கூட்டமைப்பின் சார்பில் திங்க ளன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அறி விக்கப்பட்டதைப் போல திங்களன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதையடுத்து அரசு தரப்பில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், கடந்தாண்டை போல பருத்தி நூல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதை யடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப்பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்தனர். தொடர்ந்து, ஈரோடு வீரப்பன்சத்தி ரத்தில் விசைத்தறியாளர்கள் கூட்ட மைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைவர் சுரேஷ், செயலா ளர் வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் தலைமை வகித் தனர். அதில், தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர். இதனால், 4 மணி நேரத்திற்கு பிறகு விசைத்தறிகள் வழக் கம் போல இயக்கப்பட்டன.
பைக்காரா ஏரியில் சுற்றுலா வாகனங்களுக்கு இடையூறு
உதகை, ஆக. 12 பைக்காரா ஏரிக்கு செல்லும் சாலையில், சுற்றுலா வாக னங்கள் செல்வதற்கு இடையூறாக, தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். சமீபத்தில், 3 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு பணி முடிந்ததை அடுத்து, பைக்காரா ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நீலகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் அணை முழு கொள்ளளவில் தண்ணீர் ததும்பி காணப்பட் டது. தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுகி றது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித் துள்ளது. இந்நிலையில், பைக்காரா ஏரில் சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக தனியார் வாகனங்கள் நிறுத்தப் படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பைக்காராவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும், தனியார் வாகன ஓட்டுநர்கள், அதிக அளவில் ஏற்றி வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் வாகன ஓட்டுநர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அத்து மீறி அழைத்து செல்கின்றனர். மின்வாரியத்திற்கு சொந்தமான அணை பகுதி அருகே அழைத்து செல்வதும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணி யில் உள்ள வனத்துறையும் கண்டுகொள்வதில்லை. விதி மீறி அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வரும் தனி யார் வாகன ஓட்டுனர்களையும் போலீசார் கண்டுகொள்வ தில்லை. என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும், இடையூறின்றி வந்து செல்ல சுற்றுலா வளர்ச்சி கழகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியு றுத்தப்பட்டுள்ளது.