districts

உழைப்பாளி மக்களின் நிலத்தை செங்கொடி பாதுகாக்கும்!

டி.ரவீந்திரன் பேச்சு தருமபுரி, ஜூன் 20- உழைப்பாளி மக்களின் நிலத்தை செங்கொடி இயக்கம் பாதுகாக்கும் என தருமபுரியில் நடைபெற்ற மக் கள் கோரிக்கை நடைபயண இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன் உரையாற்றினார். விவசாயிகள், மீனவர்கள், பழங் குடி மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில், தருமபுரி மாவட்டம், நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை நடைபய ணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசு கையில், தமிழ்நாட்டில் உள்ள வனங் களில் 2931 இடங்களில் யானை வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. யானை வழித்தடத்தை வனத்துறை பாதுகாக்கட்டும். ஆனால், மனிதன் வாழும் இடத்தை யானை வழித்தடம் என்று உரிமை கொண்டாடக்கூடாது.  1921 ஆம் ஆண்டு மேட்டூர் அணையை உருவாக்க அப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக விவசா யம் செய்து, வீடுகட்டி குடியிருந்த மக்களின் சுமார் 7420 ஏக்கர் நிலம்  கைப்பற்றப்பட்டது. 4,500 வீடுகளை  காலி செய்தனர். அணைகட்ட இடம் கொடுத்த பூர்வகுடி மக்களை காவிரி கரையோரம் ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் குடி யமர்த்தினர். அதன்பிறகு இந்த மக் கள் கரடு முரடான நிலத்தை பண்ப டுத்தி, சுமார் 100 ஆண்டுகாலம் விவ சாயம் செய்து, வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், ஏமனூர் கிராமத்தில் மட்டும் 680 குடியிருப்பு கள் உள்ளன. இவர்கள் வசிக்கும் இடம் பொதுபணித்துறைக்கு சொந்த மானது என உரிமை கொண்டாடப்படு கிறது. ஆனால், முறையாக நிலவரி செலுத்தி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இம்மக்க ளுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள் ளது. இப்படி பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கு வனத் துறை, வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை அனும திக்க முடியாது. பூர்வீக மக்களை  வெளியேற்றும் எண்ணம் கொண்ட  முயற்சியை அரசும், ஆட்சியாளர்க ளும் மாற்றிக்கொள்ள வேண்டும். உழைப்பாளி மக்களின் நிலத்தை செங்கொடி இயக்கம் பாதுகாக்கும் என்றார். இந்த நடைபயண இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலை வர்களுடன், கட்சியின் தருமபுரி மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், கே.அன்பு, மா.சிவா, எஸ்.செல்லன், சி.ராஜி, ஆ.ஜீவானந்தம், கே.என்.மல்லையன், ஏரியூர் ஒன்றியச் செய லாளர் என்.பி.முருகன், பென்னாக ரம் பகுதி செயலாளர் வி.ரவி, பாப்பா ரப்பட்டி செயலாளர் ஆர்.சின்ன சாமி, பென்னாகரம் கிழக்கு செயலா ளர் ஜி.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பென்னாக ரம் நகரச் செயலாளர் ஆர்.வெங்க டாச்சலம் நன்றி கூறினார்.