districts

img

மதவாத அரசியலை வீழ்த்த முற்போக்கு படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்க!

கோவை, ஜன.28- மதவாத அரசியலை வீழ்த்த, எளிய மக்களை நேசிக்கும் பாடலா சிரியர்களின் பாடல்கள் உள்ளிட்ட முற்போக்கு படைப்புகளை மக்களி டம் சந்தைப்படுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர், கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டம், துடியலூர் கிளை  சார்பில், பாடலாசிரியர் நவகவியின் 1500 பாடல் தொகுப்பு உள்ளிட்ட நான்கு நூல்கள் வெளியீட்டு விழா, மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம் மற்றும் சமீபத்தில் மறைந்த புலவர் கோவி புலிகேசி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மாலை துடியலூர், தொப்பம்பட்டி பிரிவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. ஈ.வெ.வீரமணி, தஞ்சை  தமிழ்வாணன், உடுமலை துரைராசன் ஆகியோரின் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இந்நிகழ்விற்கு தமுஎகச கிளைச் செய லாளர் அ.சண்முககனி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கவிஞர் விஷ்ணு வரவேற்றார்.

 இதன்பின் பாடலாசிரியர் நவகவியின் 1500 பாடல் தொகுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். நூலினை அறிமுகம் செய்து மாநில துணைப் பொதுச்செயலாளர் அ. லட்சுமிகாந்தன் பேசினார். தீண்டா மை ஒழிப்பு முன்னனி மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். அப்போது, பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகை யில், கவிஞர் நவகவியின் நூல் வெளி யீட்டு விழா பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் வைத்திருப் பது பாராட்டுக்குரியது. எனக்கு தெரிந்த வகையில் கட்சி லெவி என்பது கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே உள் ளது. அந்த லெவி பற்றிய நவகவி யின் கவிதை சிறப்பானது, என்றார்

முற்போக்கு படைப்புகளை சந்தைப்படுத்துக!
இதைத்தொடர்ந்து தமுஎகச மாநி லத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், “நவகவியும், மக்கள் ஒற்றுமை கீத மும்” என்ற தலைப்பில் கருத்துரை யாற்றினார். 1500 பாடல்கள் எழுதிய மக்கள் கவிஞர் நவகவி, சினிமா வுக்காக ஒரு பாடல் கூட எழுத வில்லை. ஆனாலும் அவர் எழுதிய அத்தனை பாடல்களும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதுதான் அவரின் சிறப்பு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம்தான். அந்த வகையில் கோவையில் இந்நிகழ்ச்சி நடத்துவது பாராட்டுக்குரியது. மக்கள் கவிஞர் நவகவியின் பாடல்களை மேலும் மக்க ளிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய உத்திகளை நாம் கையாள வேண்டும். சந்தை உத்தி என்பது தவறானது அல்ல. மக்களை கவர்ந்து நமது கருத்துக்களை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் சந்தை உத்தி. அதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய மதவாத அரசியலை வீழ்த்த நாம் நவகவி போன்ற எளிய மக்களை நேசிக்கும் பாடலாசிரியர்களின் பாடல்கள் உள்ளிட்ட முற்போக்கு படைப்புகளை மக்களிடம் சந்தைப் படுத்த வேண்டும், என்றார்.

பொதுவுடமை தத்துவம் தான் காரணம்
நிறைவில், கவிஞர் நவகவி ஏற்புரையாற்றுகையில், கடந்தாண்டு பாடலாசிரியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இதனால் கவிஞர்கள் மத்தியில் சிறு சலசலப்பு உருவானது. ஆதிகாலத்தில் பாடல்கள்தான் மக்க ளிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்கள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றன. கவிஞர்களைவிட பாடல் எழுதுபவர் சற்று குறைவானவர்கள் என்ற எண்ணம் உள்ளது. அது மாற வேண்டும். கவித்துவத்தை பாடல் களில் கொண்டு வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை இசையுடன் சேர்த்து கொடுக்கும் போது, அது மக்களின் மனங்களில் சுலபமாக சென்று வரவேற்பு பெறு கிறது. மேலும், என்னை கொண்டாடு வதைவிட எனது பாடல்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்று மக்க ளிடம் சேர்க்க வேண்டும். என்னைவிட எனது பாடல்கள்தான் அதிகம் கொண்டாடப்பட வேண்டும். ஒரு  படைப்பாளியின் தத்துவம் சிறப்பான தாக இருந்தால், படைப்பும் சிறப்பாக அமையும். எனது பாடல்கள் சிறப்பான தாக இருப்பதற்கு நான் நேசிக்கும் பொதுவுடமை தத்துவம் தான் பிரதான காரணம். அதுதான் எனது பாடலின் மூலம் வெளிப்படுகிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமுஎகச மாவ ட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்டத் தலைவர் தி.மணி, நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் மர கதம் வீரபத்திரன், முன்னாள் தலைவர் பத்மாலயா சீனிவாசன், ஆனந்த் புரமோட்டர்ஸ் ஆர்.ஆறுமுகம் என திரளானோர் கலந்து கொண்டனர்.