districts

img

மோடி வெற்றி பெறுவார் என ஊடகங்கள்தான் பரப்புகிறது தோல்வி பயத்தில் மோடி உள்ளார் என்பதே நிதர்சனம்

நாமக்கல் மாவட்டத்தில், சிஐடியு சார்பில், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலும் தொழிலாளர் வர்க்க கடமைகளும் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிஐடியுவின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேசுகையில்….

இழைக்கப்படுகிற அநீதிகளுக்கு எதிராக துணிவோடு போராடக் கூடியவர்களாக இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். அப்படித்தான் நாம் போ ராடி வருகிறோம். மூலையில் முடங்கி கிடப் பது நம்முடைய வேலை அல்ல. பொது வெளியில் போராட வேண்டும், அதைத் தான் நாம் செய்து வருகிறோம்.  தமிழகத்தில், இந்தியாவில் நடை பெற்ற போராட்டங்களில் பெண்கள் நடத்திய  போராட்டங்கள் வீரம் செறிந்த போராட்டங் களாகும். பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும் முழு வெற்றி பெற்றதில்லை.  சென்னை பாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிற்சங்கமே கிடையாது. அங்கு 18 வயது 19 வயது பெண்களிடம் முழுமையாக வேலை  வாங்கினார்கள். அவர்களை கொடூரமாக விடுதியில் அடைத்து வைத்து வேண்டிய நேரத் தில் நிர்வாகத்தினர் அழைப்பார்கள். எப்போ தெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் வேலைக்கு செல்ல வேண்டும். அவர்கள் கொடுப்பதுதான் உணவு.  இப்படி அடக்கு முறைக்கு ஆளான பெண்கள் திடீரென ஒரு  நாள் பரபரப்பான பெங்களூர் நெடுஞ்சா லையில் அமர்ந்தார்கள். அமைச்சர்கள், போலீஸ்காரர்கள் எல்லோரும் போராட்டத் தில் ஈடுபட்ட பெண்களிடம் கெஞ்சி கூத்தாடி னார்கள். போராட்டக்காரர்களை சமாதானம்  செய்ய முயன்றனர். ஆனால் பெண்கள் போராட்ட களத்தில் உறுதியாக நின்றார் கள். சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் நாமும் அவர்களுக்கு ஆதரவாக போராட் டத்தில் பங்கேற்றோம். இன்றோ நாளையோ விடிவு காலம் பிறக்கும் என நம்பி பொறுத்து  பொறுத்து பார்த்து அது நடக்காத பட்சத் தில், ஏமாற்றம் ஏற்படும்பொழுது பெண்கள் பொங்கி எழுகிறார்கள். அது எப்போது, எங்கேயோ தற்செயலாக  நடக்கிறதோ அங்கு நாம் நம்மை ஈடுப டுத்திக் கொள்ள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் போராளிகளை நாம் வழிநடத்த வேண்டும். அதன் வழியில் நமது இயக்கத் தை முன்னெடுக்க வேண்டும். இந்த உழைக்கும் பெண்கள் தினத்தில், எவ்வளவு பெண்கள் உழைப்பாளிகளாக, விசைத்தறிக்கூடங்களில், கட்டிடத் தொழிலா ளிகளாக இன்ன பிற பல்வேறு தொழில்க ளில் பணியாற்றுகின்றனர்.  திருச்செங்கோடு நாமக்கல் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், ஜவுளிக் கடைகளிலும் பெண்கள் அதி கம் பணிபுரிகின்றனர். பெரும்பாலான கடை களில், வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை  என்றால் கூட அவர்கள் அமரக்கூடாது என்ற விதி உள்ளது. அப்படி அடக்குமுறைக்கு ஆளாகும் பெண்களை நாம் அணுக வேண் டும். அவர்களை வீடுகளில் மற்ற பொது இடங் களில் அணுகி பேச வேண்டும். அவர்களிடம் தொழிற்சங்கம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, சங்கம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள், நம் முடைய அனுபவங்கள், நம்முடைய வரலாறு கள் குறித்தெல்லாம் அவர்களிடம் எடுத்து ரைக்க வேண்டும்.  அவர்களை அரசியல் படுத்த வேண் டும். ஈச் ஒன் கேச் ஒன் என்ற அடிப்படையில் நாம் இதை கையாண்டால் மிகப்பெரிய மாற் றத்தை ஏற்படுத்த முடியும். இன்று இருக்கிற நிலையில் நாம் பெரிய மாற்றங்களை கொண்டு  வர வேண்டும்.

தோல்வி பயத்தில் மோடி

பிரதமர் மோடி எல்லா வகையான ஊட கங்களையும் கையில் எடுத்துக் கொண்டார். இப்போது பெரும்பாலான ஊடகங்கள் மோடி தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி  பெறுவார் என்று செய்தியை பரப்பு கிறார்கள். ஆனால், உண்மையில் மோடி  கடுமையான தோல்வி பயத்தில் உள்ளார்.  ஆகவே மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வரு கிறார். தேர்தல் தேதி உடனே அறிவிக் கப்படும் என கூறப்பட்டும் இன்னும் தேதி  அறிவிக்கப்படாமல் உள்ளது?  இன்று நாளை  என தேர்தல் தேதி தள்ளி போய்க்கொண்டே உள்ளது. இதற்கு அனைத்தும் ஒரே கார ணம், நாம் நினைத்த மாதிரி தற்போது கள  நிலவரம் இல்லை என மோடி அறிந்தி ருக்கிறார்.  ராமர் கோவில் திறந்த இரண்டாவது நாள்  தேர்தல் தேதி அறிவித்து தேர்தலை நடத்த லாம் என திட்டமிட்டு இருந்தார்கள்.  ராமர் கோவில் திறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் அறி விப்பை கொடுக்க முடியவில்லை. ஏனென்றால், தோல்வி பயம்தான் இத்த னைக்கும் காரணம். தென்னிந்தியா மட்டு மின்றி வட இந்தியாவிலும் பாஜக தோல்வி  அடையும்.  நம்முடைய தமிழ்நாட்டில் நாம் வசிக்கக் கூடிய பகுதியில் நமது தொகுதியில் இந்தியா  கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை முழுமையாக்கும் வகை யில் நம்முடைய செயல்பாடுகள் வரும் நாடா ளுமன்ற தேர்தலில் இருக்க வேண்டும்.  நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய மோடி  அரசுக்கு எதிராக நம்முடைய வலுவான பிரச் சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். வாக்குகளை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண் டும். 

ஆச்சர்யப்பட்ட நீதிபதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே  மக்களிடம் நேரடியாக சென்று நிதி கேட்கி றது. உண்டியல் வசூல் செய்கிறது. அதன் மூலம் கட்சிப் பணிகளை செய்கிறது. தேர்தல்  பத்திரம் மூலமாக நிதி வசூல் செய்யாத இந்தி யாவிலேயே ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மட்டும் தான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கு போட்ட வக் கீல் சொன்னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் தேர்தல் பத்திரம் மூல மாக பணம் வாங்காத ஒரே கட்சி என்று!  அதற்கு நீதிபதி அப்படியா என ஆச்சரி யப்பட்டு போனார். நாம் மக்களை நம்பித்தான் இருக்க வேண் டும். அப்போதுதான் நாம் உண்மையாக பணி  செய்ய முடியும். மக்களிடத்தில் கட்சி நடத்த  வேண்டும். மக்களுக்காக கட்சி நடத்த வேண் டும். அந்த மக்களுக்காக எதையும் நாம் செய்ய வேண்டும். அப்படி மக்களை திரட்டி  தான், ரஷ்யாவில், கியூபாவில், வியட் நாமில், சீனாவில் நாம் மக்கள் புரட்சியை மேற்கொண்டோம். ஜனநாயகத்தை காக்க  நாம் நமது வாக்குகளை சரியாக செலுத்து வோம் நம்முடைய நியாயங்களை எடுத்துக் கூறி மக்களை தயார்படுத்துவோம் என்றார்.