அவிநாசி, ஆக.5- அவிநாசி அருகே சங்கம் பாளையம் சாலையில் தனி யார் நுற்பாலைக்கு வரும் லாரிகளால் அடிக்கடி மின் கம்பிகள் அறுபடுவது குறித்து உரிமையாளருக்கு தெரிவித்தும் அலட்சியமாக நடந்து கொண்டதால், திங் களன்று லாரியை பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம், உப் பிலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, சங்கம்பாளையம் கிராமத்தில் தனியார் நூற் பாலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து, பஞ்சு உள்ளிட் டவைகளை லாரி மூலம், ஏற்றி சங்கம்பாளை யம் சாலை வழியாக நுற்பாலையில் இறக்கு வது வழக்கம். இப்படி லாரியில் ஏற்றி வரப் படும் பஞ்சுகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரம் கொண்டவையாக உள் ளதால், சங்கம்பாளையம் சாலையில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விசைத்தறியாளர்கள், விவசாயிகள் மின் மோட்டார்கள் பழுது ஏற்படுகிறது. மேலும், அருந்து விழுகிற கம்பிகளை நூற் பாலை உரிமையாளர்கள் சரி செய்து கொடுப் பதில்லை. விவசாயிகள், விசைத்தறி உரிமையாளர்கள் தான் அறுபட்ட மின் கம்பி களை சரி செய்கின்றனர். இதுகுறித்து நுற் பாலை உரிமையாளரிடம் பலமுறை தெரி வித்தும், அலட்சியமாக நடந்துகொண்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து நுற்பாலைக்கு திங்கட்கிழமை பஞ்சு களை ஏற்றி வந்த லாரி உயர் மின்னழுத்த கம்பி யில் உரசி நின்று விட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த நுற்பாலை மேலாளர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருப்பி னும், பழதடைந்த மின்கம்பிகளை உடனடி யாக சரி செய்ய வேண்டும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கருவ லூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து அலுவலக ஊழியர்கள் இரண்டு தினங்களுக் குள் சரி செய்துவிடுவதாக கூறியதை அடுத்து, பொதுமக்கள் லாரியை விடுவித் தனர்.