அவிநாசி,நவ.28 திருப்பூர் மாநகராட்சி அறிவித் துள்ள சொத்துவரி உயர்வு அனைத்து தரப்பினரையும் கடுமை யாக பாதிக்கும், சொத்து வரி உயர்வை கைவிடும் வரையில் மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபடும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். அவிநாசியில் திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறுவதையொட்டி செய்தியாளர் சந்திப்பு வியாழனன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ் செய்தியா ளர்களிடம் கூறுகையில், திருப்பூர் மாவட்ட 24 வது மாவட்ட மாநாடு அவி னாசியில் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிக ளில் நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 1ஆம் தேதி அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் செந்தொண்டர் பேரணியும், மேற்கு ரத வீதியில் பொதுக்கூட்டம் நடைபெ றுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப் பினர்கள் ஜி.சுகுமாரன், டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் முத்து கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்க உள்ளனர். டிசம்பர் 2ஆம் தேதி தேவாங்க செட்டியார் திருமண மண்ட பத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெ றுகிறது. இம்மாநாடு பல்வேறு அம் சங்கள் குறித்து விவாதிக்க உள்ளது. குறிப்பாக, நூல் விலை ஏற்றம் காரண மாக பனியன் தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் போது, மத் திய அரசாங்கம் உரிய தலையீடு செய்ய வேண்டும் என்று கூறி, தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி ஒன்றிய, மாநில அரசை கவனத்தை ஈர்க்கச் செய்தோம். உடுமலை, மடத்துக்கு ளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆனை மலை நல்லாறு திட்டத்தை நிறை வேற்றக்கோரி போராடி இருக்கின் றோம், திருமூர்த்திமலை மலைவாழ் மக்களுக்கு, சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி காத்திருப்பு போராட் டம் நடத்தி தீர்வு எட்டாத நிலையில், உடுமலையிலிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணத்தை மேற் கொண்ட போது மாவட்ட நிர்வாக மும், வனத்துறையும் ஒப்புக் கொண்டு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதாக கூறினர். இதில் சாலைப் பணிகள் 90 சதவீதம் நிறை வடைந்துள்ளது. மலைகளில் வசிக்கக் கூடிய பல்லாயிரக் கணக் கான மக்களுக்கு விவசாய நிலப் பட்டா பெற்றுக் கொடுத்துள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தி யுள்ளது, அதேபோல அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள குளம் குட் டைகளை சேர்க்கக் கோரி, வலியு றுத்தியுள்ளோம். சொத்து வரி உயர் வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தியுள்ளது, அதேபோல நவம்பர் 11ஆம் தேதி பாதாள சாக்கடை வரி விதிப்பது சம்பந்தமாகவும் போராட் டம் நடத்தியுள்ளோம், நடைபெறு கின்ற மாவட்ட மாநாட்டில் மக்களின் நிறைவேறாத பிரச்சனைகளை பேசி விவாதிக்க உள்ளோம். அவிநாசி அத்திக்கடவு திட்டத் தில் விடுபட்டுள்ள குளம் குட்டை களை சேர்க்கக்கோரி போராட இருக்கிறோம், அதேபோல அவிநாசி தேசிய நெடுஞ்சாலை உள்ள பகுதி யில் விபத்துகள் ஏற்படும் போது அதிகப்படியான மருத்துவ வசதி யும், அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்வு செய்வதற்கு திருப்பூர் மற்றும் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே அவிநாசி அரசு மருத்துவமனை யில் போதிய வசதி ஏற்படுத்த தரக் கோரி தீர்மானம் நிறைவேற்ற உள் ளோம். ஆனைமலை நல்லாறு திட் டத்தை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தி உள்ளோம். இன்றும் கூட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சொத்து வரி உயர்வுக்கு எதிராக திருப்பூர் மாநகராட்சியில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த சொத்து வரி நடை முறைக்கு வந்தால் பெரிய அள விற்கு தொழிற்சாலை பாதிக்கும், வீட்டு வாடகை உயரும் தொழிலா ளர்கள் பாதிக்கப்படுவார்கள், இந்த சொத்து வரி உயர்வை குறைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை முன்னெடுக் கும். என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ச.நந்தகோபால், மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.