திருப்பூர், ஜூன் 23- ஒரே நாடு, ஒரே திட்டத்தின் கீழ், பொருட்கள் வழங்குவதில் ஏற்ப டும் பிரச்சனைகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை 12 ஆம் தேதி ஆர்ப்பாட் டம் நடத்தவுள்ளதாக சிஐடியு அறி வித்துள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சிஐடியு) நிர்வா கக்குழு கூட்டம் சனியன்று சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் வசிப்பதால் ஒரே நாடு, ஒரே திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் பெரும் பிரச்சனை களை விற்பனையாளர்கள் சந்திக்க வேண்டிள்ளதால், அனைத்து பொருட்களும் 100 சதவிகிதம் ஒதுக் கீடு செய்ய வேண்டும். மேலும், பெயர்வு விற்பனை மூலம் குடும்ப அட்டைகளுக்கு வழங்குவதை கணக்கிட்டு கூடுதலாக பத்து சதவி கிதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப் படும் பொருட்கள் சரியான எடை அளவுகளில், சணல் சாக்குகளில் மட்டுமே அனுப்ப வேண்டும். பணி ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு நிதி பயன்களை முழுமையாக வழங்க வேண்டும். நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊக்கத்தொகை மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வு, தேர்வுநிலை ஊதியம், சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து நியாய விலைக்கடை களுக்கும் கழிப்பிட வசதியை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் மூலம் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொய்யான தகவலை தந்து, விற்பனையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12 ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்ன தாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மகேந்தி ரன், பொருளாளர் பி.சுரேஷ், துணைச்செயலாளர் கே.எம்.சரவ ணமூர்த்தி, பி.முருகன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.