districts

சாதி, மத விவரங்களை கேட்ட தனியார் பள்ளி கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது

கோவை, நவ.13- கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட விவரக் குறிப் பேட்டில் சாதி, மத விவரங்களை கேட்டதைத் தொடர்ந்து,  கடும் எதிர்ப்பு எழுந்த நிலை யில் பின்வாங்கி உள்ளது. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குள் சாதி, மத மோதல் கள் வருவதும், சில ஆசிரியர்கள் சாதி அடிப் படையில் செயல்படுவதும் போன்ற அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகி வருகிறது.  இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களை அடையாளப் படுத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இச்சூழலில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் வித மாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபி கேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகிய வற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதி விட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர் களை பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (SC, ST, MBV, OC) என பிரித்து பதி விட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த  சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற் றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வை தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் கண்டித்துள்ளது.

இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல் பாடுகளை கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதை தடை செய்ய வலியுறுத்தி யும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி யில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறையின் முதன் மைச் செயலாளர், பள்ளி கல்வி இயக்குநர கம் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளித் தார். இதைத்தொடர்ந்து மீண்டும் நடப் பாண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல் வர், பள்ளிக்கல்வித்துறை, சமூக நீதி கண்கா ணிப்பு குழு, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சாதி, மத  அடையாளங்களை நீக்க வேண்டும் என வலி யுறுத்தி மனு அளித்தார்.

இந்த மனுவிற்கு பதிலாக சமூக நீதி கண் காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டி யன், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளருக்கு தனியார் பள்ளிகளில் மாண வர்களின் விவரக் குறிப்பேட்டில் உள்ள சாதி, மத அடையாளங்கள் குறிப்பிடுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் தார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் கோவை மாவட்ட கல்வி அலுவலர், பேரூர் அலுவலகத்திலிருந்து புகார் மனு தொடர் பாக சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் விவரங்கள் கேட்கப்பட்டது என்றும், இட  ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகை கள் ஆகியவற்றை சட்டப்படி பெற்று மாண வர்களுக்கு வழங்குவதற்கு தேவையான விபரங்கள் மட்டுமே கோரப்பட்டது என்றும், பள்ளி முதல்வர்கள் தெரிவித்ததாக மாவட்ட கல்வி அலுவலகம்  தெரிவித்ததுடன் உங் கள் கோரிக்கை மறுக்கப்படுகிறது என்றும் பதிலளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் நேருதாஸ் பள்ளியில் சாதி, மத அடையாளங்களை வெளிப்படையாக மாணவர்கள் பயன்படுத் தும் அடையாள சான்றிதழில் பதிவிடுவது தவறு என குறிப்பிட்டு பள்ளிகளின் பட்டியல் களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தி கள் பரவியதை தொடர்ந்து மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேட்டில் சாதி, மத விவரங் கள் கோரும் பகுதியை பள்ளி நிர்வாகமே அழித்துள்ளது.