districts

img

திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து இறங்கு முகம்

திருப்பூர், நவ. 9 - திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. அண்மை நாட்களாக ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னையான மல்லிப்பூ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கு  பூக்களின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளதால்  வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பூக்க ளுக்கு தேவை அதிகம் இருந்ததால் கடந்த வாரம் வரை  பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் வரத்தும் குறைந்து இருந்ததால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந் திருந்தது. தற்போது சீசன் இல்லாத காரணத்தால் பூக்களின்  விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி வெள்ளிக்கி ழமை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மல்லி கைப்பூ தற்பொழுது 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகி றது என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.  இதே போல முல்லை ரூ.320, ஜாதிமல்லி ரூ.600 இல்  இருந்து ரூ.400க்கு இறங்கியது. மேலும் அரளிப்பூ ரூ.80-க்கும்,  சம்பங்கி ரூ.20, ரோஜாப்பூ ரூ.200 என குறைந்தபட்ச விலை யில் விற்பனையாகி வருகிறது. தற்போது பூக்களின் வரத்தும்  அதிக அளவில் உள்ளதால் சீசன் குறைவான சமயத்தில் பூக்க ளின் விலை மேலும் குறையக்கூடும் என்று திருப்பூர் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.