அவிநாசி,ஜன.20 ஒன்றிய அரசின் தவறான கொள் கைகளால் விசைத்தறி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது என அவி நாசியில் சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தை துவக்கி வைத்த சிஐ டியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் தெரிவித்தார். பாரம்பரியமான விசைத்தறி தொழிலை பாதுகாக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண் டும். 8 மணி நேர வேலைக்கு மாத ஊதி யம் ரூ.26 ஆயிரம், இஎஸ்ஐ, பிஎப்., அடையாள அட்டை வழங்கி, ஓய்வூதி யம் ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தர வேண் டும். தொழிலாளர்களின் குழந்தைக ளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் ஜவுளி கழக தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த இன்சூரன்ஸ் திட் டத்தை மீண்டும் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலில் உள்ள மாவட் டங்களில் ஜவுளி சந்தை ஏற்படுத்த வேண்டும். நலவாரிய செயல்பாடு களை உறுதிப்படுத்தி, தொழிலா ளர்களுக்கு பணப்பயன்கள் காலதா மதமின்றி வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விசைத்தறி உரிமையா ளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர் கள் ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து, அவிநாசி ஒன்றியத்திற்குட் பட்ட வஞ்சிபாளையம், முரு கம்பாளையம், கணியம்பூண்டி, வெங்கமேடு, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம், கருணைபா ளையம் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் திங்களன்று சிஐடியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரம் சிஐ டியு திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடை பெற்றது. இந்த பிரச்சாரத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் துவக்கி வைத்து பேசுகை யில், விசைத்தறி தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது, விசைத்தறியை உடைத்து விற் கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் நவீன தாராள மையக் கொள்கை. ஒன்றிய அரசு விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க தவறிவிட்டது. இதை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருகிறது. சேலம் மற்றும் காஞ்சி புரத்தில் விசைத்தறி தொழிலாளர் செய்யும் பட்டு ரகத்தை ஒரு முத லாளி மட்டுமே கையில் வைத்துள் ளார். 2023- 2024 ல் புதிய கொள் கையை அமல்படுத்தி உள்ளனர். இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டு இலவச மின்சாரம் அடி யோடு ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வரும். மேலும், இந்த அரசு நூல் மற்றும் மின்சாரத்தை தனியா ருக்கு தாரைவார்த்து வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் குடும் பங்களுக்கு கல்வி நிதி, இன்சூரன்ஸ் திட்டம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தில் விசைத்தறி தொழிலாளர்க ளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண் டும். தமிழக அரசு ஜவுளி சந்தையை உருவாக்க வேண்டும் என கூறி னார். இந்தப் பிரச்சார இயக்கத்தில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் வேலுச் சாமி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் பழனிச்சாமி, குப்புசாமி, துணைத் தலைவர் சாமியப்பன் மாவட்டப் பொருளாளர் முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.