districts

img

ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக.13- நான்கு பல்கலைக்கழகங்களில் காலி யாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை பூர்த்தி செய்ய, ஆளுநருக்கு தமிழக அரசு  அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்க ளுக்கான துணைவேந்தர் பணியிடம் நீண்ட  காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இத னால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணி கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களால் சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த பணியிடங் களை பூர்த்தி செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர்  ஜெகநாதனின் பதவிக்காலம் முடிந்தும், பதவி யில் நீடித்து வருகிறார். தமிழக அரசு உடன டியாக தலையிட்டு ஊழல் வழக்கில் கைதான  துணைவேந்தரை பதவியில் இருந்து அகற்றி புதிய துணைவேந்தரை நியமிக்க வேண் டும். மேலும், தமிழ்நாடு அரசின் மாநில பல் கலைக்கழகங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கடும் நிதி சிக்கலில் சிக்கி தவித்து வரு கிறது. பல்கலைக்கழங்களுக்கு நிதி ஒதுக்கு வதை யுஜிசி முற்றிலுமாக நிறுத்தி வைத் துள்ளது. அதோடு மாநில அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியினை வெட்டியிருக்கிறது. தமிழ்நாடு அரசிடமிருந்து 50 சதவிகிதத்திற் கும் குறைவான நிதி பெற்றால் அது தனியார் பல்கலைக்கழக வரைமுறைக்குள் வரு கிறது. மாநில அரசின் உயர்கல்வித்துறை யும் தன் பங்குக்கு நிதி தணிக்கை மற்றும்  பல காரணங்களை சொல்லி பல்கலைக் கழங்களுக்கு வழங்கும் நிதியினை நிறுத்தி யுள்ளது. இதனால் பல்கலைக்கழங்கள் முடங் கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி சிக் கலை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வா கங்கள் கட்டண உயர்வின் மூலம் மாணவர் கள் மீது சுமையை ஏற்றி வருகின்றன. எனவே, நிதி பிரச்சனையால் சிக்கியுள்ள மாநில பல் கலைக்கழகங்களை பாதுகாக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் ஊழல் முறைகேட்டை சரி செய்வதற்குப் பதி லாக தேர்வு கட்டண உயர்வு என்ற பெயரில்  மாணவர்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது. எனவே, உடனடியாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பல் கலைக்கழக நுழைவாயில் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் டார்வின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன் கண்டன உரையாற்றினார். மத் தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா நிறை வுரையாற்றினார். இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் கீர்த்தி வாசன், கோகுல், துணைச்செயலாளர்கள் அபிராமி, கோபால கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் மற்றும் தருமபுரி மாவட்ட நிர் வாகி பாவேல் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.