தருமபுரி, மார்ச் 7- அரூர் வட்டத்தில் உள்ள ஏழை மக்க ளுக்கு விரைந்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், செல்லம்பட்டி பஞ் சாயத்து, கீளானூர் கிராமத்தில் கல்லாங்குத் தல் புறம்போக்கு நிலம் சர்வே எண்:65/2-ல் உள்ள நிலத்தினை வகை மாற்றம் செய்து, கீளானூர் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மத்தியம்பட்டி பஞ்சாயத்து, வேடி யப்பன் கோவில் சர்வே எண்:154/1 வீடு கட்டி குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். சிட்லிங் பஞ்சாயத்து, கத்திரிப்பட்டி, நாட்டான்வளவு, நடுவலவு, கம்மாளை ஆகிய கிராமங்களில் நூறு ஆண்டு காலமாக வீடு கட்டி குடியி ருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க வேண்டும். வேடகட்டமடுவு பஞ்சாயத்து, டி.ஆண்டியூர் கிராம சர்வே எண்:29/6 அரசு புறம்போக்கு நிலத்தில் மேல்செங்கப்பாடி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு மனைப் பட்டாவும், அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண்:62/1-ல் மேல் செங்கப்பாடி ஆதிதிராவி டர் இன மக்களுக்கு நிலப்பட்டாவும் வழங்க வேண்டும். எல்லைப்புடையாம்பட்டி பஞ்சாயத்து, கிழாப்பாறையில் சர்வே எண்:80-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். எம்.வெளாம்பட்டி பஞ்சா யத்து, காந்திநகர் குட்டப்பட்டியில் மனைப் பட்டா வழங்கிய நிலத்தினை அளந்து கொடுக்க வேண்டும். எச்.தொட்டம்பட்டி பஞ்சாயத்து பச்சினம்பட்டியில் மனைப்பட்டா இல்லாத மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். போளையம்பள்ளி பஞ்சாயத்து, ஜடையம் பட்டி கிராமத்தில் உள்ள சர்வே எண்:396, 397, 412, உள்ள நிலத்தில் ஜடையம்பட்டி மக்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை அளந்து அத்துக்காட்ட வேண்டும். மாம்பட்டி பஞ்சா யத்து, இட்லப்பட்டி கிராமத்தில் சர்வே எண்:15/1-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செய லாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.முத்து, மாநில துணைத் தலைவர் ஜி.கணபதி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் மாவட்டத் தலைவர் கே. கோவிந்தசாமி, மாவட்டப் பொருளாளர் சிவா, ஒன்றியத் தலைவர் ஜடையாண்டி, நிர்வாகி கள் சி.வேலாயுதம், சொக்கலிங்கம், வீரப்பன் தங்கராஜ், ராமன், இந்திராகாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.