திருப்பூர், நவ.28- திருப்பூர் மாநகராட்சியில் அநியாய வரி உயர்வுக்கு எதிராக வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், அதிமுக கட்சியின் மாமன்ற உறுப் பினர்களை காவல்துறையினர் வலுகட்டாய மாக கைது செய்தனர். இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி கூட்டம் வியாழ னன்று மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டம் தொடங் கும் முன்பே அதிமுகவினர் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என முழக் கங்கள் எழுப்பினர். இதையடுத்து, தீர்மானங் களை முன் மொழியாமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு மேயர் ந.தினேஷ்குமார் சென்றுவிட்டார். இதைய டுத்து, தீர்மானங்கள் விவாதிக்காமல் நிறை வேற்றப்பட்டதை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற கோரியும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் மாநகராட்சியில், சொத்து வரி, குப்பை வரி, காலியிட வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு ஆறு சதவீ தம் வரியை உயர்த்துவதுடன், அபராத கட்ட ணம் என்று கூடுதலாக ஒரு சதவீதம் விதிக்கப் படுகிறது. மேலும், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட் டணமும் ஒவ்வொரு சொத்து வரிக்கும் தனித் தனியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. ஒரே சொத்து வைத்திருப்ப வர் இரண்டு மூன்று வரிகள் செலுத்தினால், பாதாள சாக்கடை கட்டணமும் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள் ளது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் மக்களின் நலன்களுக்காக மாமன்ற கூட்டத் தில் வரி உயர்வு குறித்து விவாதிக்க வேண் டும் என மாமன்ற உறுப்பினர்களின் கோரிக் கையை நிராகரித்து மாமன்ற கூட்டம் முடிந் ததாக அறிவித்து சென்ற மேயரின் நடவ டிக்கை ஜனநாயக விரோதமானது. இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையின் அத்து மீறிய நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம். ஒருபுறம் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி தாக்குதலும், மறுபுறம் மாநில அர சின் காலி இடத்திற்கு கூட சொத்து வரி விதிக் கும் நடைமுறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜிஎஸ்டி மற் றும் சொத்து வரிகளை சம்பந்தப்பட்ட அரசு கள் குறைத்திட வேண்டும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டக்குழு வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்: திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வரி உயர்வை குறித்து விவாதிக்காமல், தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மக் கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய மாமன்ற உறுப்பினர்களை திருப்பூர் காவல் துறை யினர் நடத்திய விதம் மிக மோசமானது. காவல் துறையின் இத்தகைய அத்துமீறல் களை மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், வரி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.