நாமக்கல், மே 24- மீன்பிடி தடை காலம் துவங்க உள்ள நிலையில், வரும் நாட்களில் முட்டை தேவை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய முட்டை ஒருங்கி ணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மற்றும் கேர ளாவில் முட்டை விற்பனை நன்றாகவே உள் ளது. பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. எனவே ஐதராபாத் விலை இறக்கத்தை கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. சத்துணவு முட்டை கொள்முதல் வரும் நாட்களில் தொடங்க இருப்பதாலும், தென்மேற்கு பருவ மழை குறுகிய காலத்தில் ஆரம்பமாக இருப் பதாலும், மேற்கு கடற்கரை மீன்பிடி தடை ஜூன் 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள தாலும் வரும் நாட்களில் முட்டைக்கான தேவை மேலும் அதிகரிக்கதான் வாய்ப்பு கள் பிரகாசமாக உள்ளது. மேலும், வரும் நாட்களில் புதிய சந்தைகளுக்கு முட்டை அனுப் புவதற்கு ஏற்றுமதியாளர் சங்கம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அடுத்து வரும் நாட்களில் முட்டைக் கான தேவை அதிகரித்து வருவதை கருத் தில் கொண்டு பண்ணையாளர்கள் அறிவிக் கப்பட்ட விலைக்கு மட்டுமே முட்டையை விற்க வேண்டும். பண்ணையாளர்கள் ஒத்துழைப்பினால் தான் நோ மைனஸ் நெக் ரேட் என்பதில், இது வரை வெற்றி சாத்தியமானது. இது வரும் நாட் களிலும் தொடர வேண்டும் என்பது மட்டு மில்லாமல் என்றுமே தொடர்ந்தால் மட்டுமே முட்டை கோழிப்பண்ணைத் தொழிலை லாப கரமாய் தொடர முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.