districts

img

பொதுப்பாதையை மறைத்து முள்வேலி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கோபி, மார்ச் 14- கோபி அருகே குடியிருப்புக்கு செல்லும் வழிபாதை யில் போடப்பட்ட முள்வேலியை அகற்ற வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட் டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளை பாறைமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின குடும் பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்ப குதி மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல கீழ்பவானி  வாய்க்கால் சாலையிலிருந்து, 100 மீட்டர் தூரம் பொது பாதையை பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் இரண்டு தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை, தனக்கு சொந்தமெனக் கூறி  தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து முள்செடிகளை கொண்டு  வழிபாதையை அடைத்து விட்டார். இதனால் அப்பகுதி மக் கள் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாத நிலை  ஏற்பட்டது. மேலும், குடியிருப்புகளுக்கு செல்ல நீண்ட  தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்,  வேலைக்கு செல்லும் பொதுமக்கள் எனப் பலர் அவதிய டைந்துள்ளனர்.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத னையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொல வக்காளிப்பாளையம் - வெள்ளாங்கோவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரச்சினைக்கு தீர்வு  காணப்படும் என போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.