திருப்பூர், ஜன.13- பழையன கழிதலும், புதியன புகு தலும் முறை தற்போது மாறி விட் டது. ரப்பர், பழைய டயர், டியூப், இர சாயனம் கலந்த பொருட்களை எரிப் பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்களால் பல உடல் உபா தைகள் ஏற்படுகிறது என மாவட்ட சுற் றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள் ளார். தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரி யம் திருப்பூர் தெற்கு மற்றும் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு சார்பாக புகையில்லா போகி பண்டிகை வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்வு பல இடங்களில் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி பொங்க லூர் பகுதியில் உள்ள பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது. அலகு -2 ஒருங்கிணைப் பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பொ.வெ.க.நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நமது முன்னோர்கள் பொங்கல் பண்டிகைக்கு முந்திய தினத்தில் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையற்ற பொருட்களை எரித்து பழையனக் கழிதலும், புதிய னப் புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண் டாடி வந்தனர். ஆனால் அந்த முறை தற்போது மாறி செயற்கை பொருட்க ளாகிய ரப்பர், பழைய டயர், டியூப், இரசாயனம் கலந்த பொருட்களை எரித்து போகியை கொண்டாடுகி றார்கள். அவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஆகையால் அம்முறையை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க அனை வரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். இதைதொடர்ந்து, செம்மலைக் கவுண்டன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் முன்னிலையில் விழிப்பு ணர்வினை ஏற்படுத்த ஊருக்குள் மஞ்சப்பை பேரணி நடத்தினர். மாணவச் செயலர்கள் ராஜபிரபு, மது கார்த்திக், நவீன்குமார், கிருஷ்ண மூர்த்தி, கவியரசு தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாண வர்களுக்கும் நெகிழி இல்லா தமி ழகம் உருவாக்க வேண்டும் என்பதற் காக மஞ்சபை வழங்கப்பட்டது.