districts

நான்காவது குடிநீர் திட்டத்தில் திருப்பூர் வடக்குப் பகுதி ஊராட்சிகள் புறக்கணிப்பா?

திருப்பூர், அக்.2- திருப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள 10 ஊராட்சிகளுக்கு நான்காவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்து 7 மாதங்கள் ஆகியும் சரி பாதி பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் கூறியுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி இது தொடர் பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாக, 165 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சியில் தினமும் 24 மணி நேரமும், ஊரகப்பகுதிகளில் தினசரி குடிநீரும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூரில் வடக்கு பகுதி யில் உள்ள பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளி பாளையம், பெருமாநல்லூர், ஈட்டி வீரம்பாளையம், வள்ளி புரம், தொரவலூர், மேற்குப்பதி, சொக்கனூர், பட்டம்பா ளையம் ஆகிய 10 ஊராட்சிகளில் 165 ஊரக குடியிருப்பு பகுதி களுக்கு மேட்டுப்பாளையம் ஆற்றில் இருந்து கொண்டு வரப் படும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், நபர் ஒருவருக்கு தினசரி 55 லிட்டர் வீதம் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டு இருந்தது. எனினும் மேற்கண்ட ஊராட்சிகளில் பாதிக் கும் மேற்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகளும், பாதிக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது.  எனவே, இத்திட்டத்தில் 165 ஊரக குடியிருப்பு பகுதிக ளுக்கும் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.