சேலம், ஆக.7- சேலம் அருகே குடிநீர் விநியோகத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக் கை எடுக்கக்கோரி திங்களன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தளவாய்ப்பட்டி கிரா மத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு மாதத் திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது. அதுவும் முறையாக விநி யோகிக்கப்படுவதில்லை. இதுகுறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சுகன்யா நாராயணன் ஆகியோ ரிடம் முறையிட்டனர். இதில், ஊராட்சி மன்றத் தலைவர் முறை யான பதில் அளிக்கவில்லை. அதிமுக கவுன் சிலர், முறையான பதில் அளிக்காத நிலை யில், தகாத வார்த்தைகளில் பேசியதுடன், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் தெரி வியுங்கள், என்னை ஒன்றும் செய்ய முடி யாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பெண்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிமுக கவுன்சிலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காலிக் குடங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணி யிருந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்தனர். மாவட்ட அலுவலகத்தில் இது குறித்து மனு அளிக்குமாறு கூறினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துவிட்டு பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் முறை யான குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தில்லை. இதனால், குடிநீரை விலைக்கு வாங் கிறோம். எனவே, முறையான குடிநீர் வழங் காத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிமுக வார்டு கவுன்சிலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.