ஈரோடு, நவ.5- வடகிழக்கு பருவமழையின் தாக்கத் தால், கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட் டப்பட்ட உள்ள கொடிவேரி அணைக்கு விடு முறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல் வது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை கார ணமாக, கொடிவேரி அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விநாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேறி வருவதால், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அணையில் குளிக்கவும், பரிசல் செல் லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.