பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டத் தலைவர் என்.மணிபாரதி தலைமை வகித்தார். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.