கோவை, ஆக.22- வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பணி யாற்றிக்கொண்டிருந்த மூதாட்டியை கரடி தாக்கியதில் படு காயமடைந்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் இவருக்கு வனத்துறையினர் உடனடி நிவாரணத்தொகையை வழங்கினர். வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட வாட்டர் பால்ஸ் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் செவ்வாயன்று தேயிலை பறிக்கும் பணியில் கமலம் (59) ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென தேயிலை செடியில் மறைந்திருந்த கரடி தாக்கி யதில் மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. அருகில் இருந்த தொழிலாளர்கள் சத்தம் போடவே, கரடி மூதாட்டியை விட்டு வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. இதனையடுத்து, தலை மற்றும் வலது கையில் பெரும் காயம் ஏற்பட்ட நிலையில், வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் கமலத்தை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்பார்க்க கவ தேஜா, உதவி வனப்பாது காவலர் செல்வம், வால்பாறை வனச்சரகர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற் கொண்டு வரும், கமலத்துக்கு ஆறுதல் கூறி, உடனடி நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். வால்பாறை தேயிலை எஸ்ட்டேட் பகுதிகளில் கரடி நட மாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.