districts

img

பட்டியலின மக்களின் நிலத்தை பட்டா போட்டு விற்ற அதிகாரிகள்

சேலம், ஜூன் 18- தாதம்பட்டி பகுதியில் பட்டிய லின மக்களுக்கு சொந்தமான மயான  நிலத்தை பட்டா போட்டு விற்ற அதிகா ரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தாதம்பட்டி பகுதியில் கிராம பதிவேடுகள் வரை படங்களின்படி, நீண்ட கால பயன் பாட்டிலும், முன்னோர்களின் வழி பாட்டு இடமாகவும் உள்ள பட்டிய லின மக்களின் மயானம் உள்ளது. இந்த இடத்தில் 30க்கும் மேற்பட்ட சமாதிகளை இடித்து போலி ஆவ ணங்கள் மூலம் பலர் பட்டா பெற்றுள் ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா பெற துணை போன அரசு அதிகாரிகள் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தாதம்பட்டி பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாந கரக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல் வன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி உட்பட அப்பகுதி பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்ட னர்.