districts

img

அரசியலமைப்பு சட்டம் வழங்கிய வாய்ப்பை தட்டிப்பறிப்பது புதிய கல்வி கொள்கை

ஈரோடு, ஜூன் 27- அரசியலமைப்பு சட்டம் வழங்கி யுள்ள வாய்ப்பை தட்டிப்பறிப்பது தான் புதிய கல்வி கொள்கையின் பிர தான நோக்கம் என ஈரோட்டில் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நடை பெற்ற கருத்தரங்கில் பொதுப்பள் ளிக்கான மாநில மேடை பொதுச்செ யலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உரையாற்றினார்.  அரசியல் சாசனத்தின் வழியே கல்வியும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது. கல்வியாளர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன் தலைமை வகித்தார். மாணவர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் செ. நவீன்குமார் வரவேற்றார். பொது  பள்ளிக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றி னார்.  அப்போது பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், மக்களாட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறு திகளை மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிறார் கள். அத்தகைய சட்ட முன்வடிவுக ளுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்கி றார் ஆளுநர். மக்கள் பிரதிநிதிக ளுக்கு ஓட்டு போட்டு ஒரு பயனும் இல்லை என்கிற நிலையை, ஜனநா யகத்தின் மீது அவநம்பிக்கையை பொதுமக்களுக்கு ஆளுநர் ஏற்ப டுத்துகிறார்.  

ஒன்றிய அரசு பள்ளியை முடித்து வெளியே வந்தால் கல்லூரிக்கு செல்ல வேண்டியதில்லை. அக்னி  பாதைக்கு வாருங்கள் என்கிறார். இதைக் கடந்து ஒருவர் கல்லூரிக்கு வந்தால் அரியர்ஸ் இல்லாமல் போனால் தான் இரண்டாம் ஆண் டுக்கு போக முடியும். முதல் ஆண் டில் பாடம் குறித்து படிப்பு தேர்வு  இருக்கும். அதுமட்டுமின்றி 4  வேலை குறித்து தேர்வு இருக்கும்.  இதில், 3ல் தேர்வு பெற வேண்டும். கல்லூரி படிப்பு இனி 4 ஆண்டுகள். இரண்டாம் ஆண்டு முடித்து வெளி யேறினால் டிப்ளமோ சர்டிபிகேட் தரப்படும். அதனைக் கடந்து மூன் றாம் ஆண்டில் 7.5 பாய்ன்ட் பெற  வேண்டும். 4 ஆண்டுகள் முடிந்தால் டிகிரி சான்று கிடைக்கும். அப்போது தான் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்.  உயர் பதவிகளில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இதுவரை இருந் தனர், இருந்து வருகின்றனர். இனி போட்டியே இருக்காது. அரசியல மைப்பு சட்டம் வழங்கியுள்ள  வாய்ப்பை தட்டிப்பறிப்பதுதான்  இந்த கொள்கை. இதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை, கியூட், அக்னிபாதை என்பது. இதை இணைத்து பார்க்க வேண்டும். இதற் கெதிராக கட்சி வித்தியாசமின்றி போராட வேண்டும். பெரியார் எப் படி அனைவரையும் இணைக்க முயற்சி செய்தாரோ அப்படி நாம்  முயற்சி செய்ய வேண்டும். விடுத லைக்கு மக்கள் தெருவிற்கு வந்த தைப் போல நாமும் மக்களை தெரு விற்கு கொண்டு வர வேண்டும். அதற்கு ஈரோடு தொடக்கப் புள்ளி யாக தமிழ்நாட்டிற்கு வழிகாட்ட வேண்டும் என்றார். புதிய கல்விக் கொள்கை அம லாக்க ஆவணங்களின் அடிப்படை யில் எழுதப்பட்ட விமர்சன கட்டுரை களை தொகுத்து அரசியல் சாசனத் தின் வழியே கல்வியும், ஜனநாய கம் என்ற பெயரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பு.பா.சுரேஷ்பாபு வெளியிட்ட நூலை ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா ஆகி யோர் வெளியிட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆர்.மணி, இடைநிலை ஆசிரியர் சங்க செயலாளர் பி.வி.ராமசாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோவன், தமிழ்நாடுஉயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இல.விசயேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டார். நிறைவாக எம்.சசி நன்றி கூறினார்.