பொள்ளாச்சி, அக். 13 - சாக்கடை வடிகால் சீரமைக்கும் போதுஆழ்குழாய் கிணற்றை மூடும் வகையில் வடிகால் சீர மைப்பு பணிகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்கள் சென்று படம் எடுத்து பதிவு செய் ததை அறிந்தவுடன் அவசர அவசர மாக சூளேஸ்வரன்பட்டி பேரூ ராட்சி நிர்வாகம் ஆழ்குழாயையே அகற்றியது. தமிழகத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன் உள்ளாட்சிகளில் நடக்கும் பல பணிகளில் ஆழ் குழாய் கிணறுகள், இருசக்கர வாகனங்கள் மூடும் அளவிற்கு வடி கால் பணிகள் நடைபெற்றது. இது செய்தியானவுடன் அவசர அவசரமாக அகற்றப்பட்டது. விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதனையடுத்து உள் ளாட்சி நிர்வாகத்தின் அலட்சிய பணிகள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை செய்திருந்தது. தற்போது, இதேபோன்று ஆழ் குழாயை பயன்படுத்த முடியாத அளவிற்கு வடிகால் சீரமைப்பு பணி நடைபெற்றது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி 12ஆவது வார்டுக்கு உட்பட்ட வால்பாறை சாலையில் உள்ள நந்தினி மஹால் அருகே வடிகால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றை பயன் படுத்த முடியாத அளவுக்கு கான்கிரீட் போட்டு பாதி அளவுக்கு மூடியுள்ளனர். இதனால் அடி பம்பிலிருந்து தண்ணீரை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே செய்தியாளர் கள் சென்று அந்த அடிகுழாயை படம் பிடித்து செய்தியாக்கினர். இதனையறிந்த பேரூராட்சி நிர் வாகம் அவசரஅவசரமாக ஊழியர் ்களை அனுப்பி குடிநீர் குழாயையே அகற்றி பேரூராட்சி அலுவலகத் திற்கு கொண்டு சென்றனர். மக்கள் பயன்படுத்தும் வகை யில் குழாய் அமைக்கவும், ஒப்பந்த தாரர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத் தாலும் பணியை முறையாக கண் காணிக்காமல் விடுவதாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.