திருப்பூர், பிப். 13 – உடுமலை அருகே மலைகளில் வசிக்கும் மக்கள் கைகளில் செங்கொடிகளோடும், நெஞ் சங்களில் நம்பிக்கையோடும், பாதை வசதியை பெற்றே தீருவது என்ற உறுதியோடு மலை களில் இருந்து இறங்கி வந்து போராடுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்பகுதியில் 15 மலைகிராமங்களில் மக் கள் வசித்து வருகின்றனர். பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக காலம் காலமாக போராடியும் பயனில்லை. அதன் பிறகு மலைவாழ் மக்கள் சங்கத்தை உருவாக்கி ஒன்று சேர்ந்து செங்கொ டியோடு போராட்டத்தைத் தொடர்ந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி உடுமலை குரல்குட்டையில் மலைமக்கள் மொத்தமாகத் திரண்டு காத்திருப்புப் போராட் டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மாவட்ட நிர்வாகம், திருமூர்த்தி மலையில் இருந்து குறு மலை வரை மண்சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் பொன்னா லம்மன் சோலையில் இருந்து குழிப்பட்டி, பூச் சிக்கொட்டாம்பாறை சாலையையும், இராவ ணாபுரத்தில் இருந்து மாவடப்பு, காட்டுப்பட்டி வரை சாலையையும், கொங்குரார் குட்டை முதல் ஈசல் திட்டு வரை சாலை அமைக்கவும், தளிஞ்ச, தளிஞ்சி வயலுக்குப் பாலம் அமைக்க வும் நிதி ஒதுக்கக் கோரி வருகின்றனர். மலை மக்களுக்கு பாதை வசதி அமைக்க மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தும், திருப்பூர் மாவட்ட வன அலு வலர், இங்கு சாலை அமைக்க முட்டுக்கட்டைப் போட்டு மலைவாழ் மக்களை வஞ்சித்து வரு கிறார். அது மட்டுமின்றி பட்டியலின பழங்குடி மக்களை அடங்கி இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன், மாவட்ட வன அலுவல ரின் செயல்பாடு இருக்கிறது. தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து, சட்டம் மற்றும் நடத்தை விதியை மீறி, அப்பாவி மலைவாழ் மக் களிடம் பாஜக, அதிமுகவில் சேருங்கள் என வெளிப்படையாக பேசியுள்ளார். அத்துடன் அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் வன அலுவலர் வாடகை இல்லாமல் குடியிருப்ப தாக மலைவாழ் மக்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக பிரமுகர் சொல்லுக் குக் கட்டுப்பட்டு, சட்டப்படி வழங்க வேண்டிய உரிமையை மறுப்பதுடன், அரசு உத்தரவை மதிக்காமல் பகிரங்கமாகச் செயல்படுகிறார். இவரது செயலுக்கு அதிமுகவினர் வக்கா லத்து வாங்கிப் பேசுகின்றனர். அதிமுக ஆட் சிக்கு வந்தால்தான் உங்களுக்கு ரோடு கிடைக் கும், இந்த மாவட்ட வன அலுவலர் இருக்கும் வரை பாதை அமைத்து விடுவீர்களா? என சவால் விடுகின்றனர். அத்துடன் பாஜகவைச் சேர்ந்த வனவாசி சங்கத் தலைவர் என்ற பெயரில் சமதளத்தில் வாழும் மாற்று சமூ கத்தைச் சேர்ந்தவர், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக மனுக் கொடுக்கி றார். அந்த மனுக்களை வைத்துக் கொண்டு மாவட்ட வன அலுவலர் ஆட்சேபனை உள்ளது என்று சொல்லி மலைவாழ் மக்களை வஞ்சித்து வருகிறார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் அனு மதி கொடுத்தும் அதை தடுத்து சீர்குலைக்கும் வகையில் செயல்படும் மாவட்ட வன அலுவ லரின் வஞ்சகத்தை முறியடிக்க தற்போது மலை வாழ் மக்கள் தயாராகி விட்டனர். வெள்ளியன்று உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து மலை கிராமங்களிலும் மக்கள் செங்கொடிகளோடு தயாராகி வரு கின்றனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர் என அனைவரும் ஓரணியாக அணி திரண்டு மலைகளில் இருந்து உடுமலை நோக்கி இறங்கி வந்து கொண்டிருக்கின்றனர். போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்க ளுடனும், தங்குவதற்கான படுக்கை உள்ளிட்ட ஏற்பாடுகளுடனும் குடும்பம், குடும்பமாகப் போராட்டத்தில் பங்கேற்கத் தயாராகி உள்ள னர். இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டெல்லிபாபு உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். நம் எதிர்கால தலைமுறைக்காக நாம் இன்றைக் குப் போராடுவோம்! என்றும், வரும்போது கரடு முரடான பாதையில் இறங்கி வருகிறோம், போகும்போது புதிய பாதையில் தான் மலைக் குச் செல்வோம்! என்றும் அந்த மக்கள் உள்ள உறுதியோடு வருகின்றனர். தடைகளைத் தகர்ப்பதற்கு!