தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாய் மனு
திருப்பூர், மே 15- தனது சொத்தை விற்று தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி. இவரது கணவர் சின்ன பழனி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் காலமாகி உள்ளார். 80 வயதான பாப்பாத்திக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை பாப்பாத்தியின் இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள் ளனர். விற்பனை செய்த பிறகு பாப்பாத்தியை யாரும் கவனிக் காமலும் பாப்பாத்தி எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழி யும் செய்யாமல் மோசடி செய்துவிட்டு சென்றதாகவும், தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியு டன் வாழ்ந்து வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவ னிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கஞ்சா விற்றவர் கைது
அவிநாசி, மே 15- அவிநாசி மங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத நபர் கஞ்சா விற்ப னையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் அங்கு, கைப் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அவர், பீகார் சிட்டாமர் கியைச் சேர்ந்த சௌரபாகு மார்(25) என்பதும், விற்ப னைக்காக கஞ்சா வைத்தி ருந்ததும் தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீ சார் வழக்குப்பதிவு செய்து சௌரபாகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந் தும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டது.
கோடை விழா: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகை, மே 15- நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் மே 6ஆம் தேதியன்று கோடை விழா தொடங் கியது. இவ்விழாவில் முதல் கண் காட்சியாக கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடை பெற்றது. இதில் அமைச்சர் கா.ராமச் சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்று கண் காட்சியை தொடங்கி வைத்தனர். தற் போது ரோஜா கண்காட்சியும் நடை பெற்று வருவதால் இதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந் துள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், லேம்ஸ் ராக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணி களின் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கண்காட்சிகளை கண்டு ரசித்து சென்றுள்ளனர். இந்நிலையில், வரும் மே19ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு உதகை தாவர வியல் பூங்காவில் 125ஆவது மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற் கான பணிகளில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தோட்ட கலைத் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், உதகையில் குறைந் தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், அதிகபட்சமாக 21 டிகிரி செல் சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.
இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
ஈரோடு, மே 15- தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை யின் கீழ் இயங்கிவரும் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வரும் மே17ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கு கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என ஏழு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுவரு கிறது. 12 வயது முதல் 25 வயதுக்குள் இருப் பவர்கள் சேர்க்கப்படுவர்கள். ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கை பெற குறைந்தபட்சம் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் மட்டும் போது மானது. ஆண்டுக்கு ரூ.350 பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். மாதந்தோறும் அனைத்து மாணவர்க ளுக்கும் கல்வி உதவித் தொகை ரூ.400 வீதம் வழங்கப்படும். அரசு பேருந்துகளில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயணச் சலுகை பெறலாம். மூன்று ஆண்டுகால சான்றிதழ் படிப்பாகும். தினசரி காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பயிற்சி அளிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதி யில் தங்கிப் பயில வழிவகை செய்து கொடுக் கப்படும். இசைப்பள்ளியில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ர ஹாரம், பவானி சாலை, ஈரோடு-5 என்ற முகவரியிலும் 0424-2294365, 94435 32934 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கம் பறிமுதல்
கோவை, மே 15- கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை விமான நிலையத்தில், ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட் டது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், அந்த பயணிகள் பேண்ட் பாக்கெட்டுகள் மற் றும் உள்ளாடைகளின் அடுக்குகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டு 3.03 கிலோ எடை உள்ள சுமார் ரூ.1.9 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதை யடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நான்கு பயணிகளின், அரை கிலோவிற்கு அதிகமான தங்கத்து டன் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து நபர்களிடம் விசா ரணை மேற்கொண்டபோது, அவர்கள் புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன், சென்னையைச் சேர்ந்த சேக் முக மது என தெரியவந்தது. இதுகுறித்து உளவுத்துறை புல னாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிட்னி பாதிக்கப்பட்ட கணவருக்கு உதவுமாறு ஆட்சியரிடம் மனைவி மனு
சேலம், மே 15- கிட்னி பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவத்திற்கும், குடும்பம் நடத்த பொருளாதார உதவி செய்யுமாறு சேலம் ஆட்சியர் அலவலகத்தில் மனைவி மனு அளித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த தாமோ தரன் மற்றும் அவரது மனைவி மாலதி ஆகியோர், தங்களது இரண்டு வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளரிடம் மாலதி கூறுகையில், எங்க ளுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. எனது கணவருக்கு கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் எனது கணவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார். கண வருக்கு மாற்று கிட்னி அமைக்க எனது கிட்னி பொருந்தாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் எனது கண வர் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் பொருளாதாரம் மிக வும் பாதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு கூட வழியில்லா மல் தவித்து வருகின்றோம். எனவே, மாவட்ட நிர்வாகம் எனது கணவருக்கு கிட்னி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பொருளாதாரத்திற்கு உதவிபுரிய வேண்டுமென கண்ணீர் மல்க தெரிவித்தார்.
டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
சேலம், மே 15- சீலநாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட முயன்றனர். சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி பகு தியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட முயன்றனர். அப் போது காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டும் மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதன்பின் குமார் கூறுகை யில், சீலநாயக்கன்பட்டி பகுதியில் ஏற்க னவே ஆறு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீலநாயக்கன் பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தேவா திரு மண மண்டபம் அருகே 58 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் கோபால் என்பவது இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைப் பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்று கூறி வரும் நிலையில், தற்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடை பெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் திரு மண மண்டபம், கல்லூரிகள் மற்றும் பள்ளி கள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடை திறப் பது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையென் றால் டாஸ்மாக் கடை அமையும் இடத்தி லேயே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடு படுவோம், என தெரிவித்தார்.
பசுமை திரும்பும் முதுமலை புலிகள் காப்பகம்
உதகை, மே 15- முதுமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட வனப்பகுதியில் மீண்டும் பசுமை திரும்பி வருவதால், கூட்டம் கூட்டமாக உலா வரும் வனவிலங்கு களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்த மழையால், மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி முழுவதும் பசுமையாக மாறி உள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தில் மூன்று மாதங் களுக்குப் பிறகு மீண்டும் பசுமை திரும்பியது. இதனால் வேறு பகுதிக்கு உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வர துவங்கி யுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டு யானை கள், காட்டெருமை கூட்டம், மான்கள், அரிய லங்கூர் குரங்குகள் அதிகளவு சாலையோரங்களில் உலா வருகின்றன. அவ்வாறு உலா வரும் வன விலங்கு களை சுற்றுலா பயணிகள் அச்சுறுத்தல் வகையில் புகைப்படம் எடுக்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு - மைசூர் சாலையில் ஆபாயரணயம் அருகே உள்ள மாயாற்றில் உள்ள கரையோரத்தில் இரண்டு மணி நேரமாக நீண்ட பெரிய முதலை ஒன்று வெயில் காய்ந்த படி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து சுற்றுலா பயணிகள் முதலையை விதவிதமாக போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
மின்தடை
நாமக்கல், மே 15- குமாரபாளையம், பல் லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வளை யக்காரனூர், பல்லக்காபா ளையம், ஆலத்தூர், புதுப் பாளையம், மலையடி பாளையம், மஞ்சுபாளை யம், எக்ஸல் கல்லூரி, குமார பாளையம் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட வுள்ளது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.