கோபி, பிப்.13- கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 30ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட தொகுப்பு வீடுகள் சிதலம டைந்து இடிந்து விழும் நிலை ஏற் பட்டுள்ளதால், குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அம்மா பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராக் கணம்பாளையத்தில் 80க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டு களுக்கு முன் இந்திரா நினைவு குடி யிருப்பு, ஜவகர் வேலை வாய்ப்பு திட் டத்தின் கீழ் சுமார் 40க்கும் மேற்பட்ட இலவச கான்கீரிட் தொகுப்பு வீடு கள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்நி லையில், ராக்கணம்பாளையத்தில் கட்டி வழங்கப்பட்ட இலவச கான் கீரிட் தொகுப்பு வீடுகள் முற்றிலும் சிதலமடைந்து வருவதால், குடியி ருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ள னர். மேலும், வீடானது எந்த நேரத்தி லும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளி யேறி உறவினர்கள் வீடுகளிலும், வெளியூரிலும் தஞ்சம் அடைந்துள்ள னர் இந்நிலையில், சிதலமடைந்த கான்கீரிட் தொகுப்பு வீடுகளுக்கு பதி லாக புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டி, கடந்த பத்து ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, வரும் நிதி அறிக்கை தாக்கலில் சிதலமடைந்த வீடுக ளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்ட அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்திடம் கேட்ட போது, கடந்த 10 ஆண்டு கால அதி முக ஆட்சியில் ஆதிதிராவிட மக்கள் குடியிருக்கும் சிதலமடைந்த கான் கீரிட் தொகுப்பு வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு நடவடிக்கை எடுக்காததால் தன்னிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு தொகுதி முழுவதும் ஊராட்சிகளில் சிதலம டைந்த கான்கீரிட் வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். மேலும் பழங்குடியினர் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சிதலம டைந்த கான்கீரிட் வீடுகளுக்கு மாற் றாக புதிய வீடிகள் கட்டிகொள்ள தமி ழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ராக்கணம் பாளையம் மக்களுக்கு நல்ல செய்தி முதல்வர் அறிவிப்பார், என்றார்.