சேலம், நவ.10- அரசு சார்பில் ஜவ்வரிசி உற் பத்தி ஆலை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார். சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங் கத்தின் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தி யாளர்கள், வியாபாரிகள், மர வள்ளி விவசாயிகள் பங்கேற்ற கண்காணிப்பு கூட்டம் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.நேரு தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித் தார். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஜவ் வரிசி உற்பத்தியாளர் சார்பில் பல் வேறு கோரிக்கைகள் முன் வைக் கப்பட்டன. குறிப்பாக மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஜவ்வரிசியை மதிப்பு கூட்டு பொருளாக உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவ்வரிசியில் கலப் படம் செய்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அமைச்சர் அன்பரசன் கூறுகையில், ஜவ் வரிசியில் கலப்படம் செய்வதை தவிர்க்கும் வகையிலும் அதனை கட்டுப்படுத்தும் வகையிலும் அரசு சார்பில் புதிதாக ஜவ்வரிசி உற்பத்தி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச் சரிடம் கலந்து பேசி விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப் படும். சத்துணவில் ஜவ்வரிசியை சேர்த்தது குறித்து உணவுத்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும், என்றார். மேலும், மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் வரும் காலங்களில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், குறிப் பாக இடைத்தரகர்களை ஒழிக்கவே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை முத்தரப்பு கூட்டம் நடைபெறும் என்றும், விவ சாயிகள் ஜவ்வரிசி உற்பத்தியாளர் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.ராஜேந்திரன், அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.