உடுமலை, பிப்.22- தங்களுக்கு வாக்குரிமையை பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு, வெற்றியை பரிசளித்து தங்களது அன்பை வெளிப் படுத்தியுள்ளனர் தளி பேரூராட்சியில் வசிச் கும் மலைவாழ் மக்கள். இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை தாலுகாவிற்குட்பட்ட, தளி பேரூராட்சி பகுதி யில் பூச்சிகொட்டாம் பாறை, குருமலை, மேல்குருமலை மற்றும் திருமூர்த்திமலை பகுதிகள் அமைந்துள்ளது. இங்குள்ள செட் டில்மென்ட் பகுதிகளில் சுமார் இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு சட்ட மன்றம் மற்றும் நாடளுமன்ற தேர்தலில் தங் களின் ஜனநாயக கடமையான வாக்களிக் கும் உரிமை உள்ளது. அதேநேரம், உள் ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மட்டுமே கடந்த காலங்களில் மறுக்கப் பட்டு வந்தது. இதன்காரணமாக மலைமக்கள் வசிக் கும் செட்டில்மென்ட் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படா மல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இந்த அவல நிலைக்கு எதிராக கடந்த பல வரு டங்களாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.
இதன்தொடர்ச்சியாக அண்மை யில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்க ளும் வாக்களிக்கும் உரிமை நிலைநாட்டப் பட்டது. அதிலும் குறிப்பாக, திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள தளி பேரூராட்சியில் மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு என இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பபட்டது. அதில் குருமலை, மேல்குருமலை மற்றும் பூச்சிகொட்டாம்பாறை குடியிருப்பு பகுதி களிலுள்ள 385 வாக்காளர்களை உள்ளடக்கி 16 ஆவது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருமூர்த்திமலை குடியிருப்பு பகுதியில் 234 வாக்காளர்களை கொண்டு 17 ஆவது வார்டாக புதியதாக உருவாக்கப் பட்டது. இந்த இரண்டு வார்டுகளிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் உற்சாகமாக தேர்தல் களத்தை சந்தித்தனர். இதில், 16 ஆவது வார்டில் போட்டியிட்ட செல்வம் மற்றும் 17 ஆவது வார்டில் போட்டி யிட்ட வாணிஸ்வரி ஆகிய இருவரும் பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றனர். தங்களுக்கு வாக்குரிமையை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு தங்களின் அன்பை வெளிக்காட் டும் விதமாகவே இந்த தேர்தல் வெற்றியை பரிசளித்ததாக அப்பகுதி மலைவாழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.