திருப்பூர், ஆக.19- அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் நடவ டிக்கை எடுப்பதுடன், அந்த ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. வயநாடு பேரிடர் நிதி உதவி: இதில், வாவிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி இந்துஜா, 6ஆம் வகுப்பு மாணவிகள் தேஜஸ்ரீ, மெய் சுதர்ஷினி ஆகியோர் தங்கள் உண்டியலில் சேர்த்து வைத்தி ருந்த பணத்தை, வயநாடு பேரிடரில் பாதிக் கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கு வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஒப்படைத்தனர். புதுப்பாளையம் ஊராட்சியில் முறைகேடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் ஊராட்சி கிளைச் செய லாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி வட்டா ரம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொன்ராமபுரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு காவலர் நியமனம் செய்திருப்பதாக, 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் ஊராட்சி நிதி ரூ.9300ஐ எடுத்துள்ளனர். எடுக்கப்பட்ட நிதியை உடனடியாக மீண்டும் ஊராட்சி நிர்வா கத்திற்கு செலுத்த நடவடிக்கை மேற் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் ஊழல் முறைகேடு செய்தது அம்பலமாகி யுள்ளது. மேலும், ஊராட்சி நிர்வா கத்தை பெண் தலைவர் நிர்வாகம் செய்யாமல், அவரது கணவர் எ.பாலச்சந்திரன் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் தினசரி பணிகள் மேற்கொண்டு வருகிறார். இது சட்டத்திற்கு புறம்பான செயலாக கருதி ஊராட்சிமன்றத் தலை வர் கே.கஸ்தூரிபிரியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். தெரு நாய் தொல்லை: கருவம்பாளையம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்துவ தும், நடந்து செல்லும் பெண்கள், குழந்தை களை கடிக்க வருவதும் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் திரிந்து கொண்டுள்ளன. இந்த நாய்கள் திடீரென சாலையில் குறுக்கே ஓடி வருவ தால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் நாய் களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருவம்பாளையம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தனியார் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட் டம் குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10ஆவது வார்டு ஊத்துக்குளி சாலை கே.எம்.எஸ் லாட்ஜ் அருகில் பிபி ஒய் சிட்டி கிளப் தனியார் மதுபான கடை அமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கு அருகில் இருந்த அரசு மதுபான கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் தனி யார் மதுபான கடை வர உள்ளது. இதன் அருகில் குடியிருப்புகள், கோவில்கள், பள்ளிகள் உள்ளன. இங்கு மதுபான கடை அமைந்தால், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இடையூறாக இருக்கும். இதனால், சட் டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப் புள்ளது. மேலும், கடை அருகே மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், விபத் துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சட்ட விதி களின் படி, வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி இருக்கக்கூடிய இடத்தில் 100 மீட்டர் சுற்றளவில் மதுபானக் கடை இருக் கக்கூடாது. ஆனால் வரவிருக்கும் மதுபா ன கடை அருகே 100 மீட்டருக்குள் வழி பாட்டு தளம் அமைந்துள்ளது. பொதுமக்க ளின் நலன் கருதி இந்த மதுபான கடைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளிக் கப்பட்டது. கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்: 2005 ஆம் ஆண்டு அன்றைய கோவை மாவட்டம், தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் ஊராட்சி ஏடி காலனி குடியி ருப்பில் வசித்து வந்த மக்களுக்கு இலவச மாக இரண்டு சென்ட் விகிதம் 27 பயனாளி களுக்கு அரசு நிலம் வழங்கியது. இந் நிலையில், அரசு இலவசமாக வழங்கிய இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார். எனவே நிலத்தை மீட்டு மனை அளவீடு செய்து ஏடி காலனி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடத்தை ஆக்கிரமித்தவர் மீது தீண் டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கூட்டரங்க வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்:
பல்லடம் அருகே காமநாயக்கன்பா ளையத்தை சேர்ந்த மூதாட்டி மாராத்தாள் (95) அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, எனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். எனது மகன் கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட் டார். எனது கணவருக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் கரடிவாவியில் இருந்தது. எனக்கு இறப்புச்சான்றிதழ் பெற்று உறவினர் அந்த நிலத்தை முறை கேடாக மோசடி செய்து தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். உயிருடன் வாழ்ந்து வரும் எனக்கு, எப்படி இறப்புச் சான்றி தழை அதிகாரிகள் வழங்கினர்? இதனால் எனது குழந்தைகளுக்குச் சேர வேண்டிய பூர்வீக சொத்தை, மோசடி செய்து ஏமாற் றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது டன், எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். வாட்ஸ் அப்பில் வதந்தி: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட பெண்களிடம் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி, விண்ணப்பங்கள் பெறப்படுவதாக போஸ் டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தி ருந்தது. இருப்பினும் இதனை உண்மை யென நம்பி திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு திங்களன்று வருகை தந்தனர். அவர் களிடம் மகளிர் உரிமைத் தொகை விண் ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரிவிக் கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் திரும் பிச் சென்றனர்.