districts

img

சுடுகாடு வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன.28- குப்பன்கொட்டாய் கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சிகுட்பட்ட குப்பன் கொட்டாய் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட போயர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இப்பகுதி மக்கள், இறந்தவர்களை உடலை வாழை தோட்டம் என்ற இடத்தில் அடக்கம் செய்து வந்தனர். மாற்று சமூ கத்தை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரி வித்து வந்ததால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது வீட்டின் முன் இறந்தவர் களை அடக்கம் செய்யும் நிலைமை உள்ளது.  இக்கிராம மக்களுக்கு தனி சுடுகாடு ஏற்படுத் தித்தர வேண்டும் என வலியுறுத்தி, கடந்த மாதம் பாலக்கோடு வட்டாட்சியரிடம் மனு  அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தருவதாக அளித்த வாக்கு றுதி, தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை. இதனைக் கண்டித்தும், உடனடி யாக குப்பன்கொட்டாய் மக்களுக்கு சுடு காடு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் பி. கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ், வட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.