சென்னை, ஆக. 11 - தாம்பரம் மாநகராட்சி 21வது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி ஞாயிறன்று (ஆக. 11) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் (200அடி) சாலை - 21வது வார்டு பி.வி.வி. சாலையை இணைக்கும் வேல்ஸ் சாலை, சில்வர் ஜூப்ளி சாலை, தயாஜோதி சாலை என மூன்று இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை செப்பனிட வேண்டும். திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும். மழை நீர்க் கால்வாய்களை பாதுகாப்பான தாக பராமரிக்க வேண்டும், வார்டு வழியாக இயக்கப்படும் மினி பேருந்து சேவையை பல்லாவரம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் குவியும் மாட்டு சாணத்தை அகற்றுவதோடு, மாடுகளை முறைப்படுத்த வேண்டும், பால்கேணிக் குளக்கரையில் உள்ள நடைபாதை, காரியமேடையை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சு.பழனிசாமி தலை மையில் கட்டபொம்மன் நகரில் தொடங்கிய நடைபயணத்தை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, பகுதிகுழு உறுப்பினர்கள் எம்.சந்திரன். ப.ரேவதி, ஆர்.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.