திருப்பூர், ஆக. 23 – தாராபுரம் வட்டம் சின்னக்கம்பா ளையம் பேரூராட்சியில் பொதுப் பாதையை ஆக்கிரமிக்க முயலும் தனியாருக்கு ஆதரவாக நில அள வையாளர் பொதுப் பாதையை முழு மையாக அளக்காமல் விட்டுவிட் டார். அவர் மீது துறைரீதியான நட வடிக்கை எடுப்பதுடன், பொதுப் பாதையை மீட்டு மக்கள் பயன்பாட் டுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுக்கா செயலாளர் என். கனகராஜ் கேட்டுக் கொண்டி ருக்கிறார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலுக்கா செயலாளர் என். கனகராஜ் புதன்கிழமை அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னக்கம்பாளையம் பேரூ ராட்சி 4ஆவது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த பாதையை அருகில் உள்ளவர் குழி பறித்து ஆக்கிரமிப்பு செய்து பாதையை சீரழிக்க முயன்றார். இதைக் கண்டித்து தாராபுரம் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட் சியரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டது. அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு பாதையை அளந்து கொடுப்பதற்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார் அதன்படி செல்லம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவும் நிலத்தை அளந்தார். அதில் அரசு ஆவணப்படி 13 மீட்டர் அகலம் பாதை உள்ளது. ஆனால் நில அளவையா ளர் பாதையை முறையாக அளக்கா மல் எட்டு மீட்டர் அளவுக்கு ஒரு அளவு கோள் வைத்துவிட்டு சென்றுவிட் டார். எனவே அரசுப்பாதை இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அருகில் உள்ளவர் பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி போட முயற்சி செய்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அரசு பாதையை ஆக்கிரமிக்க விடமாட்டோம் என்று களத்தில் உள் ளனர் இது குறித்து அருகில் உள்ள வர் அலங்கியம் காவல் துறையை யும் நாடி உள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர், கோட்டாட்சி யருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள் ள்ளன. எனவே அரசு ஆவணத்தில் உள் ளபடி அங்குள்ள நிலத்தை முறை கேடாக அளந்த சர்வேயர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசு பாதையை முழுமையாக மீட்க வேண்டும். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுக்கா செயலாளர் என்.கன கராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.