அவிநாசி, ஆக.17- அவிநாசி அருகே நல்லிகவுண் டம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நகல் வழங்காததை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதை அடுத்து தீர்மான நகல் வழங்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம் புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட, நல்லி கவுண் டம்பாளையத்தில் வியாழனன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பொன் ராமபுரத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத் திற்கு, காவலாளியை நியமிக்கா மலேயே ஊதியம் வழங்குவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதே போல் சூலூர் ஒன்றியத்தில், செம் மாண்டம் பாளையம் ஊராட்சி, அவி நாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி இணைப்பு சாலை சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டுள் ளது. தொடர்ந்து முறைகேடு புகார் கள் வந்து கொண்டிருக்கிற நிலை யில் மீண்டும் ஊராட்சி நிர்வாகத் தில் இருந்து நிதி எடுக்க மனு அளிக் கப்பட்டுள்ளது. இதற்கு புதுப்பாளை யம் ஊராட்சியில் இருந்து நிதி அளிக்க கூடாது என்று பாஜகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கஸ் தூரி பிரியாவிடம் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்த னர். இம் மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள், தீர்மானம் நிறை வேற்றுவதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து, தீர்மான நகல் கொடுக்க வலியுறுத்தி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், புதுப்பா ளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், பொதுமக்கள், உள்ளிட்டோர் காலையிலிருந்து மாலை 5 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரி டம் தீர்மான நகல் கொடுத்துள்ள னர். இதில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமரவேல், பாலசுப் பிரமணியம், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் முருகன், மோகனசுந்தரம், கிளைச் செயலாளர்கள் ராமகிருஷ் ணன், கதிர்வேல், ராஜா, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் அனிபா உட்பட பலர் கலந்து கொண்டு, பழங் கரை, வேலாயுதம்பாளையம், ராம நாதபுரம், வடுகபாளையம், உள் ளிட்டு பல்வேறு ஊராட்சிகளில் மக்க ளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளித்தும், கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டும் என பேசினர். முன்னதாக கிராம சபை கூட்டம் துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படாதற்கு கண்ட னங்கள் எழுந்தது. தீர்மான நகல் கேட்டு முறையிட்டபோது கிராம சபை முடிந்துவிட்டது என அலட்சியத் துடன் ஊராட்சி மன்றத் தலைவர் சென்றது பொது மக்களயிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.