அவிநாசி, ஆக.11- கான்கிரீட் சாலை, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சௌடாம் பிகை நகர் கிளை சார்பில் தொரவலூர் பிரிவு அருகில் ஞாயிறன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பொன்ராமபுரம் சமுதா யக் கூடத்தில் இல்லாத காவலாளிக்கு ஊதியம் எடுக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சௌடாம்பிகை நகர் அருகில் உள்ள தேநீர் கடை முன்பு 19 பி அரசு பேருந்து நின்று பொதுமக்களை ஏற்றி செல்ல வேண்டும். சாலை அமைக்கப்படாமல் உள்ள பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும். வீடுகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். வஞ்சிபாளையத் திற்கு வரும் அரசு பேருந்துகள் முறை யாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். சரவணா கார்டன், எஸ்எஸ்நகர், சௌடாம்பிகை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிக்கும் தெருவிளக்கு, மேல்நிலைத் தொட்டி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சௌடாம்பிகை நகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பழனிச் சாமி தலைமை வகித்தார். ஒன்றியக் கவுன் சிலர் முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பி னர் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் வெங்கடாசலம், தேவி, முருகன், மோகனசுந்தரம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமரவேல், பாலசுப் பிரமணியம் கிளைச் செயலாளர் ராம கிருஷ்ணன், ராஜா, செல்வராஜ், துரை சாமி வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஹனிபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.