districts

img

பள்ளியின் தரம் உயர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

அவிநாசி,ஆக.12 அவிநாசி அருகே கருக் கங்காட்டுபுதூர் உயர்நி லைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நடுவச்சேரி கிளை சார் பில் திங்களன்று மனு அளிக் கப்பட்டுள்ளது.  அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட, கருக்கங்காட்டு புதூரில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் படித்து  முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு 10 முதல்  20 கிலோமீட்டர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இத னால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடுவசேரி கிளை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள்  கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை செயலா ளர் சுப்பிரமணியம், ராஜேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்க சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.