districts

கட்சி ஊழியரின் இழப்பு கட்சியின் இழப்பே! பி.சம்பத் உருக்கம்

கோவை, அக்.23- மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர் ஒவ்வொருவரின் இழப்பும் கட்சி யின் இழப்பு என யு.கே.சிவஞானம் படத்திறப்பில் பங்கேற்ற சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம் பத் உருக்கமாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவருமான யு.கேசிவஞானம் படத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் திறந்து வைத் தார். இதன்பின் அவர் பேசுகை யில், சோவியத் ரஷ்யாவின் வெற் றிக்குப் பின்னரே அந்த வெற்றி உல கம் முழுவதும் பரவி விடக்கூடாது என்பதை தடுக்கும் நோக்கத்திலே உலகம் முழுவதும் உள்ள முதலா ளித்துவ நாடுகளில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர் வையும் சலுகைகளையும் வழங்கி யது.  சோவியத் யூனியன் வீழ்ந்த சம யத்தில் இனி கம்யூனிசத்துக்கு எதிர் காலம் இல்லை என்று ஏகாதிபத்திய சக்திகள் குதூகளித்தனர். பின்னர், தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்து வந்த சலுகைகள் படிப்படியாக பறிக்கத் தொடங்கினர். இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்க ளுக்கு நிரந்தர வேலை இல்லை, நியாயமான ஊதியம் இல்லை, சலு கைகள் ஏதுமில்லை என்ற நிலை யில் வேலை செய்து கொண்டிருக் கிறார்கள்.  ஏகாதிபத்திய நாடுகள் நினைப்பது போன்றல்ல, தற்போது  உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை யில் நடைபெற்ற தேர்தல் முடிவு கள் அதே போன்று ஐரோப்பிய நாடு கள் மற்றும் தென் அமெரிக்கா நாடு களில் நடைபெற்ற தேர்தல் முடிவு கள் இடதுசாரிகளுக்கு சாதகமாக வந்துள்ளது.  இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளா னார்கள். ஆட்சியாளர்களின் ஆடம் பர ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவு கட்டி இடதுசாரி சக்திகளை ஆட் சிக்கு கொண்டு வந்துள்ளனர். இலங் கையில் ஆட்சியாளர்களுக்கு எதி ரான மக்கள் எழுச்சியை இடதுசாரி சக்திகள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். அதுபோன்ற சூழல் அமையும் போது இடதுசாரி கட்சி கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒவ்வொரு உறுப் பினரும் முழு நேர ஊழியரும் முக் கியமானவர்கள். அவர்கள் மீது  கட்சி அக்கறை எடுத்துக் கொள்வ தோடு, தோழர்களும் அவரவர் நல னில் அக்கறை எடுத்துக் கொள்வது  மிக முக்கியம். கம்யூனிச சித்தாந் தத்தை ஏற்றுக் கண்டு பொது வாழ் வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ப வர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல அவர்கள் கட்சியின் சொத்து.  கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு ஊழி யரின் இழப்பும் கட்சியின் இழப்பே. தோழர் யுகே சிவஞானம் சிறந்த களப்போராளி, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு மீண்டு  வந்து விடுவார் என நினைத்திருந் தோம். அவருடைய இறப்பு கட் சிக்கு பெரும் இழப்பாகும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு பெரும் முயற்சி எடுத் தும் அவரைக் காப்பாற்ற முடிய வில்லை. அவர் தனது உடல் நல  பாதிப்பை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை எடுத்திருந்தால் காப் பாற்றி இருக்கலாம். யு.கே. சிவஞா னம் போன்ற மக்கள் ஊழியர்களை  நாம் இனியும் இழந்து விடக்கூடாது,  என்றார்.